சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி மீது நடவடிக்கை: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று சூழலில் 10,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படுகிறது. தேர்வெழுதும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலனைகருத்தில்கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்நிலையில், டிச.16 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளதேர்வுகளின்போது கூடுதல் நடைமுறைகளைப் பின்பற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தேர்வு நாளில் காலை 10.45 மணிக்கு பாஸ்வேர்டு அனுப்பப்படும். காலக்கெடு நேரமான 10.45மணிக்குள் அனைத்து மாணவர்களும் தேர்வு...
