என்னை தொட முடியாததால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில், நாம் தமிழர் கட்சியினரை சங்கி என சொல்லப்படுவது குறித்து பேசுகையில், தன்னுடைய காலணியை எடுத்து மேடையிலேயே காண்பித்தார். கட்சியின் தலைமையில் இருந்துகொண்டு பொதுவெளியில் சீமான் இப்படி நடந்துகொண்டது பலரை முகம் சுளிக்க வைத்தது. இதுவரை வாயில் மட்டுமே அநாகரீகத்தை கொண்டிருந்த சீமான் தற்போது தன்னுடைய செயலிலும் அதை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார் என்ற விமர்சனமும் வைத்தனர். இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஹிம்லர் என்பவர் இஸ்லாமியர்களுக்கு திமுக துரோகி எனவும், திமுகவை கருவறுக்க வேண்டுமெனவும் மேடையில் பேசினார். அப்போது அங்கிருந்த திமுகவினர் உடனடியாக மேடையில் ஏறி மேடையில் இருந்தவர்களை தாக்க முயன்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாகவும், பெரிய கட்சியாகவும் இருக்கும் திமுகவினர் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். திமுகவினரின்...
