தமிழகம்

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர்,நாகை, திருவாரூர், தஞ்சை மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
தமிழகம்

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று அதிகாலை 4.47 மணியளவில் வேலூரை மையமாக கொண்டு பூமிக்கடியில் 25 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவான இந்த நில அதிர்வால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த வெள்ளியன்று மிஜோரத்தின் தென்வாலில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதே நிலஅதிர்வு வடகிழக்கு மாநிலங்களிலும் பங்களாதேஷின் ஒரு சில நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிகிறது....
Uncategorizedதமிழகம்

பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்

இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம், நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1,300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார். மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிவசங்கரின் சிகிச்சைக்கு...
தமிழகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு

தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக குரூப்-1, குரூப்-2 குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால், குரூப்-1, குரூப்-2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத் தேர்வும் நடைபெறும். நேர்முகத் தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன. அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்கள் குரூப்-2-ஏ...
தமிழகம்

29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி : இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கடலூர் ,விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ,திருச்சி ,தஞ்சாவூர், நெல்லை ,நாகை ,புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,சேலம், மயிலாடுதுறை ,கள்ளக்குறிச்சி ,வேலூர் ,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக சென்னையை பொருத்தவரை செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குமரி கடல் அருகில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வரும் 29ம் தேதி அந்தமான் அருகே உருவாக உள்ள காற்றழுத்த...
தமிழகம்

கனமழை எதிரொலி: 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக, 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வரும் 28ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை* சென்னை* மயிலாடுதுறை* தேனி* திண்டுக்கல்* விருதுநகர்* தென்காசி* திருநெல்வேலி* தூத்துக்குடி* தஞ்சாவூர்* அரியலூர்* பெரம்பலூர்* நாகை* புதுக்கோட்டை* கடலூர்* கன்னியாகுமரி* விழுப்புரம்* திருவாரூர்* திருச்சிபள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை* மதுரை* சிவகங்கை* ராமநாதபுரம்* கள்ளக்குறிச்சி* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* திருவள்ளூர்* திருவண்ணாமலை* நாமக்கல்2 நாட்கள் விடுமுறைபுதுச்சேரி,...
தமிழகம்

ரூ.82 கோடி வருமான வரி செலுத்துமாறு ஓபிஎஸ்-க்கு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸூக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித் துறை சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கடந்த 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.20லட்சமும், 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.82.12 கோடியும் வரியாகசெலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. வருமான வரித் துறையின் இந்த நோட்டீஸை ரத்து செய்யவும்,மேல் நடவடிக்கைக்கு தடைவிதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதிபி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது....
தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்று.. 11வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 11வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி...
தமிழகம்

ஜெயலலிதாவின் வேதா இல்லம்’ யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது' என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு கடந்த அ.தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ள பொருள்களைக் கணக்கிடும் பணிகள் நடந்தன. தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டு வேதா இல்லத்தையும் அங்குள்ள அசையும் சொத்துகளையும் கடந்த அ.தி.மு.க அரசு அரசுடமையாக்கியது. தமிழ்நாடு அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபாவும் தீபக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், வேதா இல்லத்துக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.67 கோடியே 90 லட்ச ரூபாயை நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர்....
தமிழகம்

பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 'அடல் டிங்கரிங்ஆய்வகம்' தொடக்க விழா நடைபெற்றது. அடல் டிங்கரிங் ஆய்வகம் என்பது, மாணவர்களின் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கான நவீனஉபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகத்தை தொடங்கி வைத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: இந்த அரசுப் பள்ளியில் 900 ஆக இருந்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. அண்ணா பிறந்த மண்ணில் அரசுப் பள்ளியின் வளர்ச்சி மகிழ்ச்சிக்குரியது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர முன்னுரிமை அளிக்க...
1 494 495 496 497 498 545
Page 496 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!