செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்ததால் வரதராஜபுரம் பி.டி.சி.குடியிருப்பு பகுதிகள் மகாலட்சுமி நகர், இரும்புலியூர் டி.டி.கே.நகர், வன்னியன்குளம், முடிச்சூர் அமுதம் நகர் பகுதிகளில் ஏரித்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளத்தை வடிய வைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து மழைநீரை வடிய வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் எந்த அளவுக்கு மழைநீர் வடிந்துள்ளது. இந்நிலையில், என்னென்ன வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் அங்கு சென்று...
