தமிழகம்

செய்திகள்தமிழகம்

கொரோனா லாக்டவுன் : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை – ஆட்சியர் உத்தரவு

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்றைய தினம் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மாலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி இன்று நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி அபிஷேக...
செய்திகள்தமிழகம்

கூட்டத்தொடர் நிறைவு: சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையை அடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஜூன் 21 ஆம் தேதி(திங்கள்கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவைத் தோதலுக்குப் பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்தார். ஆளுநர் தமது உரையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அடுத்த இரு தினங்கள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். இதையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் அவைத்தலைவர் அப்பாவு ஒத்திவைத்தார்....
செய்திகள்தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணை திறப்பு

வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பில் தொடர் மழை மற்றும் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கூடுதல் தண்ணீரால் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால் கடந்த 4ம் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக, வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்றுகாலை திறக்கப்பட்டது. அணையின் சிறிய மதகுகள்...
செய்திகள்தமிழகம்

190 முறை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் கொள்ளை!

சென்னை பெரியமேடு - வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் 190 முறை ஏடிஎம். கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்துள்ளது. பெரியமேடு SBI வங்கிக்கிளை மேலாளர் நேற்று மாலை ஏடிஎம்-க்கு சென்று சோதனை செய்தபோது பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெரியமேடு -வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் கடந்த 15, 16 மற்றும் 17-தேதிகளில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி 190 முறை ரூபாய் 16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக பெரியமேடு, பெரம்பூர், வடபழனி, தரமணி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.20 லட்சம் வரை ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தை ஈடுபட்டிருப்பது டெல்லி,ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக காவல் துறையினர் மூன்று தனிப்படைகள்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செப்.15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் செப்.15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தரப்பிலும், வேறு சிலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டு இருந்தது. அதன்படி பிற மாவட்டங்களில் கடந்த 2019-ம்ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த புதிய மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்து...
செய்திகள்தமிழகம்

14 கி.மீ கிரிவலப்பாதையில் அங்கப் பிரதட்சணம்!

உலகம் முழுவதும் கொரோனா ஒழிய வேண்டுமென ஆந்திராவை சேர்ந்த அருணாச்சல மாதவிஎன்ற பெண் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தார். 45 வயதாகும் மாதவி தீவிர சிவ பக்தர். ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் 15 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி விட்டார். தனது பெயருக்கு முன்னால் அருணாச்சலம் என்பதையும் சேர்த்துக் கொண்டார். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம் . கொரோனா தோற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு முதல் கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது . இந்நிலையில் தான் அருணாச்சல தேவி அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார் . அன்னதானம் ¸ வஸ்திரதானம் வழங்கி ஆன்மீக சேவையாற்றி வரும் அருணாச்சல மாதவி ஏழை மாணவ -...
செய்திகள்தமிழகம்

அனைத்து பள்ளிகளுக்கும்.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு.!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள் மாணவர்கள் கண்ணியமான உடைகள் அணிய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புகார் மற்றும் கருத்துகளை தெரிவிக்க பள்ளி வளாகத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். புகார்களை பதிவு செய்ய மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு தனியாக பராமரிக்கும். வாய்மொழியாக உட்பட எம்முறையில் புகார் பெற்றாலும் பதிவேட்டில் பதியப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது....
செய்திகள்தமிழகம்

ஆளுநர் உரை மீது இன்றுமுதல் விவாதம்- ஜூன் 24 வரை பேரவைக் கூட்டம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 24-ம் தேதி வரை நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்ஜூன் 22-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. 22, 23-ம் தேதிகளில்அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பேசி முடித்த பிறகு, 24-ம் தேதி விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் உரையாற்றுவார். 22-ம் தேதி (இன்று) அவை தொடங்கியதும்,...
செய்திகள்தமிழகம்

யூ டியூபர் பப்ஜி மதனிடம் ஏமாந்ததாக 100-க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலம் புகார்

யூ டியூபர் பப்ஜி மதனிடம் ஏமாந்ததாக 100-க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளனர். பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன் குமார் என்ற மதன். சேலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வேங்கைவாசலில் வசித்து வந்தார். பின்னர் சென்னையில் குடியேறினார். இவர், தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு விளையாடும் போது அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது குறித்து லைவ்வாக விளையாடிக்கொண்டே ஆலோசனை வழங்கி வந்தார். மேலும் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பினரையும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வந்தார். மேலும் பெண்களின் கற்பு நெறியை அவமதிக்கும் வகையிலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களை குறிப்பிடும் வகையிலும் பேசி வந்துள்ளார். அதை தான் நடத்தி வரும் இரு யூடியூப் தளங்களில் வீடியோக்களாக வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தார். மதனின்...
செய்திகள்தமிழகம்

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 21ம் தேதி சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, கலைவாணர் அரங்கத்தில் ((இன்று)) காலை 10 மணிக்கு, 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது. புதிய அரசு பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில் சில ஆளுநர் உரையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. கொரோனா தொற்றை குறைக்க தமிழ்நாடு அரசு...
1 478 479 480 481 482 497
Page 480 of 497

Right Click & View Source is disabled.

error: Content is protected !!