கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்ன மாயாகுளம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்களில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட புதுச்சேரி ராஜ்குமார், கர்நாடகா முஹமது ஆஷிக், சேலம் கிஷோர், விராலிமலை சிவபாலன், கன்னியாகுமரி முஹமது ஹாலிப், திருநெல்வேலி தினேஷ் குமார், மதுரை தருனீஷ், விக்ரம், ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
சக மாணவர்கள் தகவலின் பேரில் பாதிக்கப்பட்ட 8 மாணவர்களை, விடுதி காப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் உடனடியாக மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் முதலுதவி அளித்து, குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. தகவலறிந்த ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் கீழக்கரை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் மாணவர்களிடம் விசாரித்தனர்.
ஹோட்டலில் வாங்கி கொடுத்த பரோட்டா, சிக்கன் மசாலா சாப்பிட்டதாக கூறினர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிட்ட உணவில் 8 பேரின் உடல் நல பாதிப்பிற்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், துணை வட்டாட்சியர் பழனி குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசிநாததுரை உள்ளிட்ட வருவாய் துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம் விசாரித்தனர்.
மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதும் கல்லூரிக்கு மீண்டும் அனுப்பப்படுவர் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.