தமிழகம்

தமிழகம்

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவில் கூறியிருப்பதாவது: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, 'புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். புற்றுநோயால் குணமடைவோரின் விகிதம் மேற்கத்திய நாடுகளில் 80 சதவீதமாகவும், இந்தியாவில் 65 சதவீதமாகவும் உள்ளது, இதை இன்னும் குறைக்க வேண்டும்' என்பதே இந்தஆண்டின் முக்கிய நோக்கமாகும். தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண்கள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல, ஆண்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்தான் அதிகம் இருக்கிறது. ஒரு லட்சம் பேரை சோதனை செய்தால், 97 பேருக்கு ஏதாவது ஒரு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒரு லட்சம் பேரில் 63 பேர்...
தமிழகம்

சென்னை ஐசிஎஃப்-ல் 51 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்க இலக்கு

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-ல் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ரூ.97 கோடியில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும். ஆர்சிஎஃப் மற்றும் எம்சிஎஃப் தொழிற்சாலைகளில் மொத்தம் 95 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இப்பணிகள் இன்னும் இரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. இதையடுத்து, சென்னை ஐசிஎஃப்-ல் ஏற்கெனவே ரயில் வாரியம் அளித்துள்ள அனுமதியின்படி மொத்தம் 51 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
தமிழகம்

பிரச்சாரத்தில் விதிமீறல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட வேண்டும்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரேகட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்துள்ளது. அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரோனா தடுப்பு விதிமுறைகளை வேட்பாளர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர நினைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் வாகனங்களில் பரிசு பொருட்கள், அளவுக்கு அதிகமான பணம் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி...
தமிழகம்

தமிழகத்தில் பயங்கரவாதம் தலையெடுக்கிறது: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

'பா.ஜ., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தி.மு.க., ஆட்சியில் பயங்கரவாதம் தலையெடுக்க துவங்கி விட்டதை உணர்த்துகிறது' என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வானதி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2007ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து, பா.ஜ., அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இப்போது, பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், பா.ஜ., அலுவலகம் தாக்கப்படுவதும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதும் வாடிக்கையாக உள்ளது. சம்பவம் நடந்த உடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை போலீசார், தண்ணீர் ஊற்றி கழுவி உள்ளனர். அவசரமாக தடயங்களை அழிக்க உத்தரவிட்டது யார் என்பதை, போலீசார் விளக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆரம்ப...
தமிழகம்

எனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், இன்று அதிகாலை கமலாலயத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு கரைகள் காவல்துறையால் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பான காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு மூலம் 6 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் குண்டு வீசியதாக கூறியுள்ளனர் என்றார். நீட் நிலைப்பாட்டை கண்டித்து குண்டு வீசியதாக கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் ரவுடிகளுக்கு வாழ்வு கிடைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவிற்கு உற்சாகம் தருகிறது, காரணம் கட்சி வளர்கிறது என்று அர்த்தம் என்றார். மேலும் குண்டு வீச்சு சம்பவம் யாரோ...
தமிழகம்

கோமியம் குடிக்க வைத்து சித்ரவதை; பெண் மருத்துவர் தற்கொலை; கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில், அரசு மருத்துவரான அவரது கணவர், மாமியாருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையைசென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் மரியானோ ஆண்டோ புரூனோ(36). இவருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த அமலி விக்டோரியாவுக்கும்(32) கடந்த 2005-ல் திருமணம் நடைபெற்றது. ஒரு வருடம் வரை குழந்தை இல்லை என்பதால், பூஜைகள் நடத்தி, அமலியை கோமியம் குடிக்க வைத்துள்ளனர். பின்னர், கூடுதலாக வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். கடந்த 2007-ல் அமலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அமலி விக்டோரியா பெயரில் இருந்த சொத்துகளை தங்களது பெயரில் எழுதி வைக்குமாறு கூறி, கணவர் வீட்டார் அமலியை சித்ரவதை செய்துள்ளனர். அமலி 2-வது முறையாக கர்ப்பமடைந்தபோது, அவரது கர்ப்பம் கலைந்துள்ளது....
தமிழகம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சுரங்கப் பாதை பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, விரைவில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, சென்னையில் இரண்டாவது கட்டமாக மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் தடுப்புகள் அமைத்து, சாலைகளைத் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் அடிப்படை கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ''சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் துரிதமாக நடைபெறும்...
தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்றனர். அப்போது,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.கச்சதீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,பின்னர் அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனையடுத்து,எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை பிப்.11-ஆம் தேதி யாழ்ப்பாணம் சிறையிலடைக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே,கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விட்டு வருகிறது.இந்நிலையில்,இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்...
தமிழகம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் – சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்!!

தமிழ்நாட்டில்இளநிலைபொதுமருத்துவகலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது . எம் . பி . பி . எஸ் ., பி . டி ....
தமிழகம்

பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வசதியாக தேர்தல் பார்வையாளர் எண்கள் வெளியீடு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் வட்டார பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி...
1 434 435 436 437 438 499
Page 436 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!