தமிழகம்

தமிழகம்

மதுரை அப்போலோ மருத்துவமனையில் 51வயது நபருக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது

மூளைச்சாவு ஏற்பட்டவரின் கல்லீரலை பொருத்தி மதுரை அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்ததுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ குழுவினர்கள் கூறியதாவது, கடந்த நவ.16 அன்று தமிழ்நாடு உறுப்பு மாற்று வலையமைப்பு மூலம் மூளைச்சாவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நபரிடமிருந்து கல்லீரல் பெறுவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கிடைத்தது. தகவல் கிடைத்த உடனேயே அறுவை சிகிச்சை குழுவானது இரண்டு அணிகளாகப் பிரிந்து வேகமாக செயலாற்றத் தொடங்கியது. ஒரு குழு அரசு மருத்துவமனையிலிருந்து கல்லீரலைப் பெற்று வருவதற்காக நவ.17ம் தேதி காலை 5 மணிக்கு அனுப்பப்பட்டது. அதேவேளையில் மற்றொரு குழுவினர் கல்லீரல் பொருத்த வேண்டியவருக்கான அறுவை சிகிச்சைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர். மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஏற்புத் தன்மை மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்டு சரியாக 10 மணிக்கு...
தமிழகம்

தொடர் முழக்க போராட்டம்

இன்று (25 - 11 - 2022 ) காலை - 11 மணிக்கு மூன்றாம் நாளாக நீதி கேட்டு தொடர் முழக்க போர்ட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் 4 வது வார்டு செயலாளர் இளையராஜா அவர்களின் வசித்து வந்த வீட்டை பெரியகுளம் வருவாய் துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேர்ந்து சுமார் 60 ஆண்டுகாலமாக வசித்து வந்த வீட்டை இடித்ததை கண்டித்து நீதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் மீது வண்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இளையராஜா குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க கோரியும் இடித்த வீட்டை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தமிழ்...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் தாட்கோ மூலம் மலைவாழ் பெண்களுக்கு கடனுதவி வழங்கினார்.

வேலூர் ஆட்சியர் கூட்டரங்கில் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை மலை பகுதியில் தையல் பயிற்சி முடித்த 23மலைவாழ் பெண்களுக்கு தொழில்முனைவோர் திட்டத்தில் தையல் இயந்திரம் மற்றும் ஆடை தயாரிக்க 50 சதவீத மானியத்துடன் ரூ1 லட்சம் கடன் உதவியை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார். அருகில் அணைக்கட்டு எம் எல் ஏ நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, தாட்கோ மேலாளர் பிரேமா ஆகியோர் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள், மர்ம நோயால் அழியும் நிலை – கத்தரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் பாதிப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கத்தரி , வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் ,  கடந்த சில மாதங்களாக மிளகாய் செடியில் மர்ம நோய் தாக்கி செடி நாளடைவில் கருகி , அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தென்பழஞ்சி மாவிலிப்பட்டி , கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200 ஏக்கர் பரப்பளவில் பயரிடப்பட்ட மிளகாய்ச் செடிகளுக்கு மர்ம நோய் தாக்கி வருவதால் , தாங்கள் முதலீடு செய்து விவசாயம் செய்த மிளகாய் செடிகள் வீணாகி கருகி வருவதை எண்ணி, மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள், எதற்காக இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது ? அழிவுக்கு காரணம்...
தமிழகம்

திருமங்கலத்தில் திமுக சார்பில் வருகிற சனி, ஞாயிறு இரு தினங்களில், புதிய வாக்காளர் சேர்த்தல் குறித்து திமுக நிர்வாகிகளிடையே கலந்தாய்வுக் கூட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில், மாவட்டச் செயலாளர். மணிமாறன் தலைமையில், வருகிற சனி, ஞாயிறு (26.11.22 & 27.11.22) ஆகிய இரு தினங்களில் , தேர்தல் ஆணைய உத்தரவுபடி, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு குறித்தும், வாக்காளர்களின் வாக்குரிமை குறித்தும் பொதுமக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும் எனப்பேசப்பட்டது. இதில் திருமங்கலம் நகரம் , ஒன்றியம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியிலிருந்து ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கு பெற்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலத்தில் உள்ளபாமக நகரச் செயலாளராக பணியாற்றிய கண்ணையா, தற்போது மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பதவியேற்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கண்ணையா (65)என்பவர் கடந்த 15 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது . இவர் கடந்த முறை திருமங்கலம் பா.ம.க நகரச் செயலாளராக பணியாற்றினார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தைலாபுரத்தில் அக்கட்சியின்செயற்குழு கூட்டம், கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தின் போது திருமங்கலம் கண்ணையா (65)மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பதவி அளித்து அவருக்கு கட்சியின் சார்பில் சான்றிதழும் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற கண்ணையாவிற்கு, திருமங்கலத்தில் அக்கட்சியின் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் ,மாலைகள்...
தமிழகம்

தேனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

தேனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, ஏ.எச்.எம். டிரஸ்ட் நிர்வாகி இப்ராகீம்.மஞ்சு.உள்பட பலர் உடன் இருந்தனர். இந்த பேரணி தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கி தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்.

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 48ஆனையாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.   இதில் 8 இடங்கள்காலியாக உள்ளது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் சங்கம் சார்பில் 2நாள்சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது. இதில் 40பேரில் நேற்று 22பேர்சிறுவிடுப்புஎடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் பல்வேறு மக்கள் பணிகள் முடங்கியது போரட்டத்தில் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணிகள் நெருக்கடிகள் காலமாக கடந்து ஆய்வுகள் விடுமுறை தின இரவு நேரங்களில் ஆய்வுகள் வாட்ஸ் ஆப் காணொளி மூலம் ஆய்வுகள் அனைத்துயும் முற்றாக கைவிடுதல் மக்கள் நலன் கருதியும் நிர்வாகம் நலன் கருதியும் கருத்தில் கொண்டு பெரிய ஊராட்சிகளை பிரித்து அதிகபட்ச 25 ஊராட்சிகளை உள்ளடக்கி ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் : ரா.மணிகண்டன்,...
தமிழகம்

சுகாதார வளாகம் அருகிலேயே சுகாதாரக்கேடு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் பெண்கள் சுகாதார வளாகம் உள்ள மெயின் ரோட்டில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தேங்கி ஒரு வித துர்நாற்றம் வீசுவதாகவும் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து தேனூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் ஊராட்சி மன்ற தலைவரோ ஊராட்சி செயலாளரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்றும், ஊராட்சி மன்றம் சார்பாக தினசரி வீடுகளுக்கு குப்பை வாங்க வருபவர்கள் வராத காரணத்தால் இந்த பகுதி...
தமிழகம்

பாலமேடு அருகே மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி, மேட்டுப்பட்டி, சாத்தையாறு அனை வழியாக பாலமேடு செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே ஆளை விழுங்கும் பள்ளங்களும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகவும் காணப்படுகின்றன. குறிப்பாக சாத்தையார் அணைய ஒட்டிய மேற்பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்; இதனால் பாலமேடு வாடிப்பட்டி செல்லும் வாகனங்கள் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் மலைப் பகுதியாக உள்ளதால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.  சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களை வெட்ட வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாலையில் நடுவில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்க இப்பகுதி வாகன ஓட்டிகள் பொதுமக்கள்...
1 433 434 435 436 437 563
Page 435 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!