தமிழகம்

தமிழகம்

வளர்த்தவர்களை மறந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணம்: சசிகலா பேச்சு

ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, ராமாவரம் தோட்டத்தில் ரத்ததான முகாமை சசிகலா தொடங்கி வைத்தார். பின்னர், தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 50 ஆண்டுகால வரலாற்றில் அதிமுக இதுபோன்று தொடர் தோல்விகளை எப்போதும் கண்டதில்லை. எனவே, இத்தருணத்திலாவது அனைவரும் சிந்தித்து பார்த்து அதிமுகவின் நன்மை கருதி ஒற்றுமையோடு செயல்பட்டால் கட்சி நிச்சயம் வலிமை பெரும். விதைத்தவர்கள், வளர்த்தவர்கள், காப்பாற்றியவர்கள் என இவர்களை மறந்ததன் விளைவே இன்று கட்சி அனுபவித்துவரும் நிலை என்பதை கூறிக்கொள்கிறேன். ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்ற நிதர்சனத்தை புரிந்துகொண்டால் வரும் காலங்களில் நிச்சயம் வெற்றிபெறுவோம். நாம் ஒன்றிணைந்து கரம் கோர்ப்போம். இவ்வாறு பேசினார்.  ...
தமிழகம்

மூத்த பத்திரிகையாளர் முகம் மாமணி காலமானார்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியான முகம் மாமணி (91) காலமானார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட முகம் மாமணி, 1953-ல் விடுதலை நாளிதழில் அச்சுகோர்க்கும் பணியாற்றினார். பின்னர், 1956 முதல் 1991 வரை 36 ஆண்டுகள் எல்ஐசி-ல் பணிபுரிந்தார். 1982-ல் கே.கே. நகரில் இலக்கிய வட்டம் அமைப்பை ஏற்படுத்தி, மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சொற்பொழிவுக் கூட்டங்களை நடத்தினார். சிறு வயது முதலே எழுத்து, பேச்சில் ஆர்வம் கொண்ட முகம் மாமணி, 1983-ல் முகம் என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி, 40 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தமிழறிஞர்கள் நாரண.துரைக்கண்ணன், கா.அப்பாத்துரை, கிஆபெ.விஸ்வநாதம் ஆகியோரின் வரலாற்றை முகம் இதழிலும், பின்னர் நூல்களாகவும் வெளியிட்டார். இவரது படைப்புகள் 22 நூல்களாக வெளிவந்துள்ளன. இவர் வயது மூப்பு காரணமாக கே.கே. நகரில் உள்ள இல்லத்தில் நேற்று காலமானார். அவரது...
தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுக நிர்வாகியை தாக்கியதாக கைதான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியில் 49வது வார்டுக்கு உட்பட ராயபுரம் பகுதியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். திமுகவை சேர்ந்த நரேஷ் என்ற அந்த நபரை பிடித்த அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அவரை தாக்கி, சட்டையை கழற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து நரேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார்...
தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரு வார்டில் மட்டும் மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது முடிந்தது. அன்று இரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கையை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கடந்த 22ஆம் தேதி புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது, புவனகிரி பேரூராட்சி 4 வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுது அடைந்து. பின்னர் டெல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சரிபார்த்தும், அதனை சரி பார்க்க முடியவில்லை. இதனால் 4வது வார்டு வாக்கு...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, பொன்னமராவதி, இலுப்பூர் ஆகிய பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன‌. இதில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அறந்தாங்கி நகராட்சியில் பதிவான வாக்குகள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. புதுக்கோட்டை நகராட்சிக்கு வாக்கு எண்ணிக்கைக்காக 10 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு 10 வார்டுகளாக சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டன. நகராட்சி மற்றும் 8...
தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்

திமுக தொண்டரின் சட்டையை கழற்ற வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19-ம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலின்போது, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டில் உள்ளஒரு வாக்குச்சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்ற நரேஷ் (33) அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர், நரேஷை மடக்கிப் பிடித்து தாக்கினர். அவரை அரை நிர்வாணமாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது. தாக்குதலில் காயமடைந்த நரேஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தண்டையார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்....
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது. இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில், இன்று(பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும்...
தமிழகம்

திமுக நிர்வாகியை தாக்கியதாக வழக்கு: ஜெயக்குமார் கைது; சிறையில் அடைப்பு

நகர்ப்புறா உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக நிர்வாகியைத் தாக்கிதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அப்போது, சென்னை ராயபுரம் பகுதியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக ஒருவரை அதிமுகவின பிடித்து தாக்கத் தொடங்கினர். அங்கே இருந்த ஜெயக்குமார், பிடிபட்ட நபரை தாக்க வேண்டாம் என்றும் அவருடைய கைகளை கட்டும்படி கூறினார். பிறகு, அந்த நபரின் சட்டையைக் கழட்டி அவருடைய கைகள் கட்டப்பட்ட நிலையில், அதிமுகவினருடன் சேர்ந்து ஜெயக்குமார் அந்த நபரை சட்டை இல்லாமல் சாலையில் நடக்கை வைத்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் அமைச்சர் மற்று அதிமுக தொண்டர்களால்...
தமிழகம்

ஓட்டுச்சாவடிகளை ஆக்கிரமித்துள்ள திமுக.,வினர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நகர்ப்புற தேர்தல் ஓட்டுப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. கோவை, சென்னையில் திமுக.,வினரால் பா.ஜ., வேட்பாளர்கள் அதிகம் தாக்கப்பட்டுள்ளனர். கோவை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலையில் பா.ஜ., வேட்பாளர்கள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்திருந்தனர்.கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. மேலும், சில ஓட்டுச்சாவடிகளின் அருகிலேயே வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்....
தமிழகம்

சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் கோவையில் பிப்.27-ல் பறவைகள் கணக்கெடுப்பு: விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம்

கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் 10-வது ஆண்டாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி கோவையில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத் கூறியது: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள பறவைகளை கணக்கெடுக்க வேண்டும். அதன்பின், https://ebird.org/home என்ற இணையதளத்தில்அன்றைய தினம் இரவு 7 மணிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு, neasacon@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குழு புகைப்படம், தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். குழுவாக 3 முதல் 4 பேர் இணைந்து இதில் பங்கேற்கலாம். இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் http://bit.ly/saconbirdrace2022என்ற இணைப்பில் வரும் 26-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். கணக்கெடுப்பில் பங்கேற்கும் குழுவின்...
1 432 433 434 435 436 499
Page 434 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!