தமிழகம்

தமிழகம்

தமிழக பொது பட்ஜெட் இன்று தாக்கல்: சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார்

தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார்.இதையடுத்து, 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல்நடந்ததால், முந்தைய அதிமுக அரசின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த நிலையில், கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆக.13-ம் தேதி தாக்கல் செய்தார். 'காகிதம் இல்லா சட்டப்பேரவை'...
தமிழகம்

2 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்ற திருவண்ணாமலை கிரிவலம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் சார்பில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்களும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், கார்த்திகை தீபம், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட திருவிழா காலங்களில் பல லட்சம் பக்தர்களும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசாங்கமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் ஒரு பகுதியாக திருக்கோவில்களுக்கும், திருவிழாக்களுக்கும், கிரிவலத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.அதன்படி திருவண்ணாமலை கிரிவலத்திற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு பொறுப்பேற்ற 8 மாத காலங்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் திருவண்ணாமலை...
தமிழகம்

எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு!

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது . அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் . பி . வேலுமணி 2016 முதல் 2021 காலகட்டத்தில் ரூ .58.23 கோடி ( அதாவது வருமானத்தை விட 3,928% அதிகமாக ) சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ் . பி . வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் சோதனை நடத்தினர் . இந்தச் சோதனையில் ரொக்கப் பணம் , முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன . இந்நிலையில் எஸ் . பி . வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர் ....
தமிழகம்

கடற்படை தளவாட உதிரிபாக உற்பத்தி மையகிறது கோவை!

கடற்படைக்கு தேவையான தளவாட உதிரி பாக உற்பத்தி மையத்தை, கோவையில் ஏற்படுத்த, நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டில்லி கடற்படை தலைமையக அதிகாரி ரியர் அட்மிரல் விருப்பம் தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.கோவையில் இந்திய கடற்படை தலைமையகம் மற்றும் கொச்சியில் உள்ள, தென் இந்திய கடற்படை தலைமையக பிரதிநிதிகளுடன், கொடிசியா நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, "ராணுவத்திற்கு தேவையான தரமான பொருட்களை தயாரிப்பதில், கொடிசியா ஈடுபட்டுள்ளது. ராணுவ ஆர்டர்களை பெறவும், அதை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளவும், வழிகளை ஏற்படுத்த முயன்று வருகிறோம். கடற்படையினர் தங்கள் தேவைகளை தெரிவித்தால், அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள இங்குள்ள தொழிற்சாலைகள் தயாராக உள்ளன. ''கடற்படையில் கொச்சின் கப்பல் பழுதுபார்க்கும் தளம், இந்திய விமான படையின் 5பிஆர்டி பிரிவு ஆகியவற்றுடன், கொடிசியா புரிந்துணர்வு ஒப்பந்தம்...
தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி,தான் பதவி வகித்த காலங்களில் முறைகேடாக நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கிய புகாரின் அடைப்படையில் அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோவையில் 42, சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 13 லட்சம் ரொக்கம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத்தொகை கைப்பற்றப்பட்டதாகவும், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், நிறுவனங்களுக்கிடையே பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,எம்.எல்.ஏ விடுதியில் எஸ்.பி.வேலுமணி அவர்களின் அறையில்...
தமிழகம்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் நீராவி இன்ஜினை டீசலில் இயக்க சோதனை ஓட்டம்

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மலை ரயில் நீராவி இன்ஜினை டீசலில் இயக்கும் வகையில், 4 பெட்டிகளுடன் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "நீலகிரி மலை ரயில் நீராவி இன்ஜின்,நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயில்மூலமாக இயக்கப்பட்டு வந்தது.இதனால், அதிக புகை வெளியேறி சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்பட்டு வந்ததுடன், ரயிலின் இழுவை திறனும் குறைந்தது. மேலும், பராமரிப்பு செலவும் அதிகமாகி வருவதால், டீசலில் இயங்கும் வகையில் நீராவி இன்ஜின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், மாசு மற்றும் செலவு குறையும். இந்த இன்ஜினின் சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு 4 பெட்டிகளுடன் மட்டுமே மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. டீசல் பயன்படுத்துவதன் மூலமாக, 5 பெட்டிகளுடன் மலை ரயிலை இயக்கலாம். இதனால், கூடுதல் பயணிகள்ரயிலில் பயணிக்க முடியும். பராமரிப்பு செலவும் குறையும்....
தமிழகம்

உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு: சேலம், ஈரோட்டில் 100 டிகிரியை கடந்த வெயில்

தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழைக் காலம் முடிந்து குளிர் காலம் தொடங்கியும், அவ்வப்போது பெய்த கனமழை, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் போன்றவற்றால் குளிரை உணர முடியாமலேயே, இந்த ஆண்டு குளிர் காலமும் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, மதுரை, கரூர் பரமத்தி, சேலத்தில் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 14, 15-ம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 14-ம் தேதி(இன்று) தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 முதல் 5 டிகிரி ஃபாரன்ஹீட்...
தமிழகம்

லிஃப்ட்-ல் 2 மணி நேரம் சிக்கி தவித்த குழந்தை உள்பட 13 பேர்.. சென்னையில் பரபரப்பு!!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நேற்று இரவு 7:45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து வந்த பயணிகள் மின் தூக்கியை பயன்படுத்தினர். 5 பெண்கள், ஒரு ஒன்றரை வயது கை குழந்தை உட்பட 13 பேர் பயணித்த அந்த மின் தூக்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றது. மின்தூக்கியில் சிக்கி இருந்தவர்கள் அதில் ஒட்டப்பட்ட அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு, உள்ளே சிக்கியிருக்கும் விபரத்தை ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் லிப்ட் இரண்டு தளங்களுக்கு இடையில் பாதியிலேயே சிக்கி இருப்பதை கண்டனர். அரை மணி நேரத்தில் மின்தூக்கி பொறியாளர் வரவழைக்கப்பட்டு லிப்டை இயக்கும் பணிகள் நடைபெற்றன. லிஃப்ட் ல் சிக்கி இருப்பவர்களின்...
தமிழகம்

ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்றிருந்தால்,அக்கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது. அதனடிப்படையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில்,திமுக கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில்,வருகின்ற ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளார்.டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதையடுத்து, அதனை திறந்து வைக்க முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வரான...
தமிழகம்

இருபோகம் விளையும் விவசாய நிலத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்க கஞ்சங்கொல்லை விவசாயிகள் எதிர்ப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை கிராமத்தில் விவசாய நிலத்தில் இயற்கை எரி வாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் வட்டத்தின் கடைகோடி கிராமம் கஞ்சங்கொல்லை. இந்த கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கீழணையில் தேக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி இங்கு சுமார் 500 ஏக்கரில் ஆண்டு தோறும் இருபோக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தின் கீழ், விளைநிலங்களில் கீழ்குழாய் பதிப்பதற்கு இக்கிராமத்தை சேர்ந்த 100 விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கடந்த மாதம் துணை ஆட்சியர் கண்ணனிடம், விளைநிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கு குழாய் பதிக்க கூடாது எனக்கூறி ஆட்சேபனை தெரிவித்து தனித் தனியாக மனுக்கள்...
1 428 429 430 431 432 499
Page 430 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!