தமிழகம்

தமிழகம்

”ஒமைக்ரான் XE பாதிப்பு இதுவரை இல்லை”-மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமானச் சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் XE குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒமைக்ரான் XE பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. மார்ச் மாதத்தை பொறுத்தவரை நாம் அனுப்பிய அனைத்து சாம்பிளும் ஒமைக்ரான் என்று உறுதி செய்யப்பட்ட போதிலும்...
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தங்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு உதவிபெறும் பள்ளிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்ட தீர்ப்பில், "மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும். மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு...
தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேரிடம் மறு விசாரணை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீதிமன்ற வழக்கால் ஆணையத்தின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 7-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போலோ மருத்துவர்கள் 11பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், மறு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவர்கள் 11 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மருத்துவர்கள் தவபழனி, செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது. அப்போலோ மருத்துவர்களிடம்...
தமிழகம்

தமிழகத்தில் சொத்து வரியைத் தொடர்ந்து பேருந்து, குடிநீர், மின் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்: பழனிசாமி குற்றச்சாட்டு

சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து பேருந்து, குடிநீர், மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றையும் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே காதி கிராப்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி பேசியதாவது: சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கூறவே இல்லை. ஆனால், மத்திய அரசு மீது பழியைச் சுமத்தி, சொத்து வரியை திமுக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. 2 ஆண்டுகளாக கரோனாவால் மக்கள் வேலையின்றி, வருமானமின்றி அவதிப்பட்டு வரும் சூழலில், சொத்து வரியை 150 சதவீதம் வரை திமுக அரசு உயர்த்தியது...
தமிழகம்

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மதுரை சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது....
தமிழகம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றுஅதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந் நிலையில், தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்.5-ம் தேதி (இன்று)கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்தது. அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையிலும், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையிலும் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது....
தமிழகம்

சென்னையில் வாகன நெரிசலைத் தவிர்க்க முதல்முறையாக ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள்

சென்னையில் வாகன நெரிசலைத் தவிர்க்க ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 5 இடங்களில் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, காமராஜர் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மட்டுமின்றி, இதர சாலைகளிலும் அதிக நெரிசல் உள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாதபடி, சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலை சந்திப்பில் பிரேத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குள் நின்றவாறு, போக்குவரத்து சிக்னல்களை போலீஸார் இயக்கி வருகின்றனர். கூண்டுக்குள் போலீஸார் நிற்பது தெரியாமல், சில...
தமிழகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி சொத்து மீட்பு

கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில், கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, 4,920 சதுரஅடி பரப்பளவு உள்ள மனை லட்சுமணன் என்பவருக்கு மாத வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மனையை 4 பேர் ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டி குடியிருந்தும், கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்டும் இருந்தனர். நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டும், நியாய வாடகையை செலுத்தாததால், இணை ஆணையரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், உள் வாடகைதாரர்கள் ஆக்கிரமித்திருந்த 1,874 சதுரஅடி மனை, கடந்த 2018 ஜூலை 30-ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சுவாதீனம் எடுக்கப்பட்டது. ஆனால், 1,525 சதுர அடி பரப்பளவுள்ள மனையில்...
தமிழகம்

கோவையில் அதிர்ச்சி..!! மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி அருகே சந்தைபேட்டை எதிரில் கே.எஸ். கிளினிக் 2 வருடங்களாக செயல்பட்டுவருகிறது. இந்த கிளினிக்கில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக புகார் வந்துள்ளது. புகாரின் பேரில் அவினாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.சக்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவரிடம், சான்றிதழ் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் மருத்துவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து சந்தேகம் அதிகரித்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக அவினாசி போலீசார் மற்றும் தாசில்தார் ராகவி ஆகியோருக்கு மருத்துவ அதிகாரிகள் தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ...
தமிழகம்

திமுக அலுவலக திறப்பு விழா | டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு

புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் இன்று சந்திக்கிறார். நாடாளுமன்ற இரு அவை களிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, திமுகவுக்கு 2013-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதை ஏப்.2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இன்று பிற்பகல்...
1 425 426 427 428 429 499
Page 427 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!