புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை!
விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. இதுகுறித்து விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு புத்தக திருவிழா நவம்பர் 16 முதல் 20 வரை கே ஜி மஹாலில் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.சி.நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ப்ரிங்டல் பப்ளிக் பள்ளி, எஸ் என் ஆர் வித்யா நேத்ர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி வித்யாலயா...
