தமிழகம்

தமிழகம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் பல ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்காததை கண்டித்து சீருடை அணியாமல் பணி

தொழிற்சங்கங்கள் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவையின் ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு இரண்டு சீருடைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக ஒப்பந்தத்தில் பேசப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு செட் சீருடை...
தமிழகம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகஅரசைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள மின்வாரிய பணியிடங்களில் ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்தமுறையில் பணியாளர்களை சேர்ப்பதைக் கண்டித்தும் ஊதிய ஒப்பந்த முறையை அமல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதைக்...
தமிழகம்

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் முக்கிய கோரிக்கை

தென்காசி மாவட்ட புதிய உதயம் அனைத்து மாற்றுதிறனாளிகள் சங்கம், டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்....
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை கொட்டி சென்ற இருவர் கைது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் கேரள மாநில கழிவுகளை கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் கொட்டி சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென் மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.  24 மணி நேர பயணிகள் விமான சேவைக்காக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். பயணிகள் கட்டணம் குறைக்க பெரிய விமானங்களை பயன்படுத்திடவும்.  மதுரை  திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் M.P, இணைத்தலைவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் M.P. துணைத்தலைவர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா ,மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர், மதுரை இயக்குனர் பாபுராஜ் துணை பொது மேலாளர் ஜானகிராமன்'மத்திய தொழிலில் பாதுகாப்பு படை துணை கம்மாண்டன்ட் உமா...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிகட்டு காளை உயிரிழந்ததால் கிராமமக்கள் சோகம். கிராம மக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மலரஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட முத்தாலம்மன் கோவில் காளை உடல்நல குறைவால் உயிரிழந்தது. இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உட்பட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்தது. காளை இறந்த தகவலறிந்து சுற்றுவட்டார கிராமமக்கள்,மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் பலரும் வந்து மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊருக்குள் செல்ல பிள்ளையாக வலம் வந்த காளை இறந்ததால் கிராம பெண்கள் சோகத்துடன் கும்மியடித்தும், ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின் அலங்கரிக்கப்பட்ட காளையை வாணவேடிக்கையுடன் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்தனர். தங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக வளர்க்கபட்ட கிராமத்து கோவில் காளை திடீரென உயிரிழந்ததால்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே கோயில் சாவியை வழங்க மறுக்கும் ஒரு தரப்பினரை கண்டித்து, அதே பிரிவை சேர்ந்த மற்றொரு தரப்பினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தின் நடுவே மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஊரில் வசித்து வரும் ஒரே பிரிவினர் இரண்டு தரப்பாக உள்ளனர். எனவே கோயிலில் வழிபாடு மற்றும் புரட்டாசி பொங்கல் திருவிழா நடத்துவதற்கான உரிமை ஒவ்வொரு ஆண்டும் முறை வைத்து இரண்டு தரப்பினருக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த புரட்டாசி மாதம் திருவிழா நடத்திய தரப்பினர், கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரிவினருக்கு கோயில் சாவியை வழங்க வேண்டும். ஆனால் இது வரை சாவி வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்டதற்கு அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறியும், சாவியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த வாரம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக கடந்த 26ம் தேதி வட்டாட்சியர்...
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் – 10 – க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழும் நிலையில் உள்ளதால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், சாலையோரத்தில் செல்லும் வாகனங்கள், மற்றும் நடை பயணிகள் உள்ளிட்டோர் மிகுந்த பீதியில் உள்ளனர். மின்சார வாரியம் போர்க்கால நடவடிக்கையில் , விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சீர் செய்து பெரும் உயிரிழப்பை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா – மாணவ / மாணவிகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி அசத்தல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், திருமங்கலம் வட்டார வள மையம் சார்பில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைத்திருவிழா பார்வையாளர்களையும், ஆசிரிய, ஆசிரியைகளையும் வியக்க வைத்தனர். இத் திருவிழாவில் 6 ,7, 8 ஆகிய மூன்று வகுப்புகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக பரதம், நாட்டியம், குச்சுப்புடி, தப்பாட்டம் உள்ளிட்ட பழங்கலைகளை வெளிப்படுத்தி , அக்கலைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் , எழுத்துப் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவற்றில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலம் அருகே உடைகுளம் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுயநலத்திற்காக சமூக விரோதிகள் வெளியேற்றியதால் விவசாயிகள் வேதனை – விவசாயிகளுக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை வீணடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கண்மாய் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த அதிகாரிகளுக்கு வேண்டுகோள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குதிரைசாரிகுளம் கண்மாயில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையினாலும் வைகைநீரில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டதாலும் கண்மாய் நிரம்பி வழிகிறது , இதனைத் தொடர்ந்து அங்குள்ள உடைகுளம் கண்மாயிலும் நீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனை சில சமூக விரோதிகள் தங்களது சுயநலத்திற்காக உடைகுளம் கண்மாயில் இருந்து தண்ணீரை வெளியேற்றி , தண்ணீரை வீணடிப்பதாகவும் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் குடிநீரை விற்கும் தொழிற்சாலைகளை சார்ந்த சிலர் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள், திருமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தங்களது கோரிக்கை மனுவை அழித்தனர் .  விவசாயிகளுக்கு பயன்படுத்தக்கூடிய கண்மாய் தண்ணீரை காக்க வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 410 411 412 413 414 557
Page 412 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!