விசிக நிர்வாகியால் மிரட்டப்பட்ட இராஜபாளையம் ராணுவீரரின் குடும்பத்திற்கு பாஜகவினர் 200 பேர் ஊர்வலமாக சென்று ஆதரவு – குடும்பத்தினருடன் செல்போனில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதி சேர்ந்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக சமூக வலையதளத்தில் கருத்து தெரிவித்ததற்காக அக்கட்சி நிர்வாகியால் மிரட்டப்பட்ட இராஜபாளையம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டிற்கு சென்று பாஜகவினர் ஆதரவு தெரிவித்தனர். இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி. சி.ஆர்.பி.எப் இவர் மேகலயாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதை கண்டித்து ராணுவ வீரர் குருமூர்த்தி சமூக வலையதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் குருமூர்த்தியை விசிக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலர் குருமூர்த்திக்கு மிரட்டல் வீடியோ வெளியிட்டனர். இதையெடுத்து ராணுவ வீரர் குருமூர்த்தியை...
