தமிழகம்

தமிழகம்

கரும்பு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் தரணி சர்க்கரை ஆலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் தென்காசி மாவட்டத்தில் செயல்பட்ட தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 25 கோடி ரூபாய் பணத்தை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி தலைவர் G.K.நாகராஜ் தலைமை வகித்தார் .மாவட்ட விவசாய அணி தலைவர் R.மகேஷ்வரன் வரவேற்புரையாற்றினார் .மாநில ஆராய்ச்சியாளர் பாலசுப்ரமணியம்.மாநிலத் துணைத் தலைவர் எஸ் ஆர் தேவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவத் தொகை...
தமிழகம்

டிச.25 ல் தொலைதூர ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கம்

ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (டிச.25) கிளம்பும் தொலை தூர ரயில்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் பொருத்தியுள்ள சென்சார் கருவியில் இன்று அதிகாலை 2:31 மணியளவில் ரெட் அலர்ட் ஒலித்தது. இதைதொடர்ந்து, ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. சென்சார் கருவி செயல்பாடுகளை கண்காணிக்கும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் வரை ரயில்களை மண்டபத்தில் இருந்து இயக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி இன்றும், நாளையும் (டிச.24) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தினசரி ரயில்களில் திருச்சி, மதுரை பாசஞ்சர் ரயில்களை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கவும், சென்னை, கன்னியாகுமரி விரைவு ரயில்களை மண்டபத்தில் இருந்து கால அட்டவணை படி இயக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச.25 காலை, இரவு வேளைகளில் ராமேஸ்வரத்தில் புறப்பட வேண்டிய...
தமிழகம்

உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் பட்டினத்து மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி தொகுதி பொறுப்பாளர் ரகுவரன் தலைமையில் உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி டி ஆர் சொக்கநாதன் பட்டினத்து மக்களின் மாவட்ட தலைவர் முத்துமாரி தலைமையில் தெற்கு ஒன்றிய தலைவர் கருப்பையா முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி டி ஆர் சொக்கநாதன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் விபத்து காப்பீடு திட்டம் வீடு இல்லாதவர்களுக்கு மோடி திட்டத்தின் கீழ் வீடு உட்பட பல்வேறு சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார் இதில் ஏராளமான பாரதியார் சார்ந்த கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

இராஜபாளையம் பகுதிகளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 5000 பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தாவில் அருகே கல்லணை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு பாலாபிஷேகம் இளநீர அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது துளசி சந்தனம் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு  அருள்பாவித்தார். இதேபோன்று ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதி வழி விடு விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது.  5000க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

உணவு, டிபன்பாக்ஸ், போர்வை வழங்கி குழந்தைகளை மகிழ்விக்க நடனம் ஆடி உற்சாகபடுத்திய நடிகர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் உள்ள நாட்டுப்புற கிராமக் கலைஞர்கள் மிகவும் நலிவுற்ற நிலையில் ஏராளமானோர் உள்ளனர் அவர்களின் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கிட பிரபல திரைப்பட நடிகர் "கங்கணம்" சௌந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிங்கம் 3,ரம்மி, ஜிகர்தண்டா, கொம்பன், கடம்பன் உள்ளிட்ட 32 படங்ககளில் வில்லன், மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்தவர், சௌந்தர்.  தற்போது "கங்கணம்" எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த கொரான காலகட்டங்களில் பொதுமக்கள் மற்றும் பார்வையற்றவர்கள், நலிவுற்ற கிராமிய கலைஞர்கள் என பல்வேறு அமைப்புகளுக்கு நலதிட்டங்கள் வழங்கியவர். அவனியாபுரம் பகுதியில் உள்ள நலிவுற்ற நிலையில் உள் கிராமிய கலைஞர்களின் குழந்தைகளை உற்காக படுத்தி கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கினார். இறையில் கல்லுாரி பேராசிரியர் ஞானபிரபு, நடிகர் கணேசன் ஆகியோருடன் செளந்தர் கிறிஸ்மஸ் விழாவில்...
தமிழகம்

மதுரையில் சைக்கிளில் வந்து கோவில் விளக்கை திருடி செல்லும் மர்ம நபர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு – பரபரப்பு

மதுரையில் தினமும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் வரு கின்றன. அவற்றை தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைத்து வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், தெருக்களின் சந்திப்புகளில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பை பாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல டயர் நிறுவனம் ஒன்று உள்ள விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டு இருந்த அனையா விளக்கு ஒன்று காணமல் போனது பார்த்து திடுக்கிட்டனர் வணிக வளாக நிர்வாகினர். உடனே அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது நள்ளிரவு ஒரு மணி 40 மணி நிமிடத்தில் சைக்கிளில் வந்த ஒரு நபர் கோவிலினுள் கையை விட்டு விளக்கை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. எப்போதும் ஆட்கள் நடமாட்டம்...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் நாலை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம்

புதிய வகை கொரோனா தொற்றான எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத் துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின்படி மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை முதல் செயல்படுத்தப்படும். விமான நிலைய உள் வளாகத்திற்குள் வருபவர்களுக்கு 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அல்லது கொரான இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும். முக்கியமாக முக கவசம் கண்டிப்பாக அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூர் ,இலங்கை, துபாய், சார்ஜாவில் இருந்து விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பயணிகள் மதுரை வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதனை...
தமிழகம்

கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை, துவக்கி வைத்தல்

மதுரை மாநகராட்சி புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.  மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மமேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதாளச்சாக்கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகிறது. இவ்வடைப்புக்களை சரிசெய்வதற்கு மாநகராட்சியில் நான்கு கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாதாளச்சாக்கடை அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கு...
தமிழகம்

மின் இணைப்பு வழங்கிய திமுக பேரூர் கழக செயலாளர்

கெங்கவல்லியில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள புற்று மாரியம்மன் திருக்கோவிலுக்கு, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு இல்லாமல் இருந்த இந்த ஆலயத்திற்கு தற்போது பேரூர் கழக செயலாளர் திரு.சு. பாலமுருகன் அவர்களின் தொடர் முயற்சியால் இன்று மின் இணைப்பு வழங்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற பூஜையில் பேரூர் கழக செயலாளர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தார்கள் . செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

சுதந்திர போராட்ட தியாகி கக்கன் அவர்களின் 41 வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சர்ருமான கக்கன் அவர்களின் 41 வது நினைவு நாளை முன்னிட்டு.மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் நாகேஷ்வரன் தாளைக்கண்ணன் வெங்கடசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 25 பேர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 366 367 368 369 370 563
Page 368 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!