கரும்பு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் தரணி சர்க்கரை ஆலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் தென்காசி மாவட்டத்தில் செயல்பட்ட தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 25 கோடி ரூபாய் பணத்தை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி தலைவர் G.K.நாகராஜ் தலைமை வகித்தார் .மாவட்ட விவசாய அணி தலைவர் R.மகேஷ்வரன் வரவேற்புரையாற்றினார் .மாநில ஆராய்ச்சியாளர் பாலசுப்ரமணியம்.மாநிலத் துணைத் தலைவர் எஸ் ஆர் தேவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவத் தொகை...
