காட்பாடி கிறிஸ்தியான்பேட்டைசோதனை சாவடியில் 7 கிலோ கஞ்சா சிக்கியது 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை ஆந்திர மாநில சோதனை சாவடியில் மதுவிலக்கு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்றுஇரவு காட்பாடி காவல் துறையினர்வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தபோது இந்த தேசத்திற்கு இடமாக இருந்த பையை சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த பையை வைத்திருந்த வேலூர் மாவட்டம் வாலாஜா சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நந்தகுமார்(25)மற்றொரு நந்தகுமார்(22)ஆக இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது அவர்களிடம் இருந்த7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
