ஒத்தக்கடை பகுதியில் அடுத்தடுத்து தொடரும் சைக்கிள் திருட்டு
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் அடுத்தடுத்து சைக்கிள்கள் திருடப்பட்டு வந்துள்ளனர் இந்த நிலையில் நேற்று காலை பாரதி நகரில் வசித்து வரும் பாபு ஹசன் என்பவருக்கு சொந்தமான சைக்கிளை தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளார் மாலை வீட்டில் வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் திருடப்பட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை மற்றும் பாபுஹாசன் இணைந்து சைக்கிளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது சக்கர வாகனத்தில் இருவர் இணைந்து சைக்கிளை எடுத்துச் செல்லும் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
