தமிழகம்

தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு,வெல்லம் கொடுக்க கோரி பாஜக விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.  2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் ,இந்த வருடம் பல்வேறு விமர்சனங்களின் எதிரொலியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு...
தமிழகம்

மதுரையில் இரு வேறு விபத்துகளில் பைக்கில் சென்ற இளைஞர் மீது லாரி மோதியதில் இளைஞர் தலை நசுங்கி பலி மற்றொரு விபத்தில் முதியவர் மீது அரசு பேருந்து மோதியதில் தலை நசுங்கி பலி

மதுரை மாநகர் கரிசல்குளம் ராம் முனி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (எ) ராஜன்(35) தனது மனைவி ரேணுகாதேவியுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். இவர் காளவாசல் பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் லோன் முகவராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் இன்று காலை காளவாசல் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். கூடல்நகர் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது முன்னால் சென்ற நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு சொந்தமான ஒப்பந்த லாரி ரேசன் பொருட்களை ஏற்றிவந்தபோது திடிரென பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி லாரியின் சக்கரத்திற்குள் விழுந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலயே ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜன் தலைக்கவசம் அணிந்திருந்த்நிலையிலும் தலைநசுங்கிய நிலையில் உயிரழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து...
தமிழகம்

எழுமலைப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது.22 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலுமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை தனிப்படை பிரிவு போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலிசார் சோதனையில் ஈடுபட்ட போது எழுமலை அருகே மானூத்து முனியாண்டி கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த பெண்களைப் பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக எழுமலை அருகே மானுத்தை சேர்ந்த பாண்டியின் மனைவி பவுன்தாய்(50) ,வீரா மனைவி பேச்சியம்மாள்(55), பாஸ்கர் மனைவி பேச்சியம்மாள்(45). ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த மூன்று பெண்களையும் கைது செய்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து எழுமலை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் புல்லட் வாகனத்தில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டிகளிடம் – தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது, 6 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இடையபட்டியைச் சேர்ந்த காந்தியம்மாள், தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி, நரியம்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் உள்ளிட்ட மூதாட்டிகளிடம் புல்லட் வாகனத்தில் வரும் இரு பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் என மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் முகவரி கேட்பது போன்று நடித்து மூதாட்டிகள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயின்களை தொடர்ச்சியாக பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.,அடுத்தடுத்து நடைபெற்ற இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக உசிலம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், சிந்துபட்டி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து மதுரை மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் மற்றும் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு உத்தரவின் பேரில் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடி வந்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அவர்கள்...
தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தனி ஆளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை புது விளாங்குடி பகுதியில் சேர்ந்த முத்துமாரி( வயது 32) என்பவர் மதுரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தற்காலிக அக்கவுண்டண்டாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்லூர் எல்ஐசி மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் முத்துமாரியின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் மதிப்பிலான தாலிச் செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று உள்ளார். உடனே சம்பவம் குறித்து மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் முத்துமாரி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் தொகுப்புகள் ஆய்வு செய்யபட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட...
தமிழகம்

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் எம்‌.ஜி.ஆரின் 35வது ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ராஜபாளையம் அதிமுக நகர ஒன்றிய கழகம் சார்பில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நகர் கழக செயலாளர்கள் வழக்கறிஞர் துரைமுருகேசன், பரமசிவம் ஆகியோர் சத்திரபட்டி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் அழகுராணி, வனராஜ் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம் பேரூர் கழக செயலாளர்கள் பொன்ராஜ் பாண்டியன் , அங்கு துரை, மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

அலங்காநல்லூரில் சிறுவர் பூங்கா அமைக்க எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் பூமி பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் எம். எஸ். எம். நகர் பகுதியில் ,சிறுவர் பூங்கா ரூபா 37 லட்சம் மதிப்பீட்டில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வெங்கடேசன் எம் .எல். ஏ. கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில், ஒன்றிய செயலாளர் தனராஜ், நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகர வேல் பாண்டியன், பேரூராட்சித் தலைவி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் , துணை த் தலைவர் சாமிநாதன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், உதவிப் பொறியாளர் கருப்பையா, அலுவலக இளநிலை உதவியாளர் ராசா, ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பிரதாப், தொழில்நுட்ப பிரிவு சதீஷ், ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், திமுக அவைத் தலைவர் பாலமேடு தங்கம் ,ஒன்றிய கவுன்சிலர் சரவணன் கார்த்திக், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி...
தமிழகம்

சமத்துவபுரம் புனரமைப்பு பணிகளை, அமைச்சர் உதயநிதி ஆய்வு

சிவகங்கை மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சிறுகூடல்பட்டி கிராமத்திலுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் வசித்து வரும் 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரப்பேட்டை ஊராட்சி, சிறுகூடல்பட்டி கிராமத்தில், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள் குறித்து, ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு...
தமிழகம்

முதல் பெண் வழக்கறிஞருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மேலவாசல் குடியிருப்பு வாசிகள்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேளவாசல் குடியிருப்பு பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மதுரை மாநகராட்சியில் தூய்மை காவலர்களாக பணிபுரிந்து வருபவர்கள். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் இப்பகுதி மக்கள் தூய்மை பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மேலவாசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண் சட்டம் படித்து வழக்கறிஞராகி சென்னையில் வழக்கறிஞர்களுக்கான பார் கவுன்சிலில் பதிவு செய்து சாதித்துள்ளார். மேலவாசல் குடியிருப்பு பகுதியில் முதல் பெண் வழக்கறிஞர் துர்கா ஆவார். இவர் இன்று காலை சென்னையிலிருந்து ரயில் நிலையத்திற்கு வருகை தந்த போது அவரது உறவினர்கள் அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.குறிப்பாக மேலவாசல் பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் பெண் வழக்கறிஞர் துர்காவிற்கு பொன்னாடை போர்த்தி...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவஙகள்

ராஜாமில்ரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன்வாலிபர் மீது கொலைவெறித்தாக்குதல் - இரண்டு வாலிபர்கள் கைது. செல்லூர் நந்தவனம் ஈ.வி .ஆர் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் செல்வபாண்டி 25 .இவருக்கும் பாலம்...
1 356 357 358 359 360 557
Page 358 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!