தமிழகம்

தமிழகம்

கிராம சாவடி மற்றும் கோவிலில் ஆடு, மாடுகளை கட்டி அசுத்தப்படுத்தி நோய் தொற்று பரவும் அபாயம் – அருந்ததி இன மக்களுக்கான சுடுகாடு இடிந்து சரிந்ததால் வேதனை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள காமராஜர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் அருந்ததி இன மக்கள் வசித்து வருகின்றனர் . இங்கு உள்ள பொது கிராம சாவடி மற்றும் பெருமாள் கோவிலில் ஆடு, மாடுகளை கட்டி சிலர் அசுத்தப்படுத்தி வருவதுடன் , நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் புகார் அளித்துள்ளனர். மேலும் அருந்ததி இன மக்களுக்கான சுடுகாட்டு மேற்கூரை இடிந்து சரிந்து விழுந்தது . இதனால் அவர்களுக்கு சுடுகாடு இன்றி தவித்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவு நீர் வாய்க்கால், குடிநீர், தெரு விளக்கு இன்றி அவதியுற்று வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர் .  இது குறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம்,...
தமிழகம்

நெல்லையில் தேசிய நுகர்வோர் உரிமை தின விழா; விழிப்புணர்வு போட்டிகள்

நெல்லையில் தேசிய நுகர்வோர் உரிமை தின விழா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமையில் நடந்தது. இதில் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் இணைந்து தேசிய நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு போலி விளம்பரமும், நுகர்வோர் நிலையும் என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தூண்டில் விளம்பரமும் நுகர்வோர்களும் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், நுகர்வோர் உரிமை கடமை என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள்...
தமிழகம்

மதுரையில் படிக்கும் போதே லேசா அசந்த சிறுவன் வீடியோ வைரல்

சமூக வலைதளத்தில் ட்ரெண்டுகள் ஏராளம். நாட்டு நடப்பில் இயல்பாக நடக்கும் குட்டிக் குட்டி விசயங்கள் கூட பார்வையாளர்களை கவர்ந்து அதிகம் பகிரப்படுகிறது. இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த சிறுவன் மாலை வேளையில் படித்துக் கொண்டிருக்கும் போதே அசந்து தூங்க முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். க், ங், ச் முதலியன மெய் எழுத்துகள் எனப்படும். இந்நிலையில் இந்த பாடத்தை சிறுவனின் பெற்றோர் பள்ளி முடிந்தது வீட்டுப்பாடமக மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்துள்ளனர். இதனை கேட்டபடி படித்த அந்த சிறுவன் உண்ட மயக்கத்தில் லேசாக கண் அசந்த படி படிக்கிறான். ஆனால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத சிறுவன் தூங்கி வழியும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை...
தமிழகம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட கூடிய கிறிஸ்தவர்களுக்கு பேராலயத்திற்கு  மதுரை பாத்திமாநகர் சர்ச் மற்றும் ஞானஒளிவுபுரம் சர்ச் நேரடியாக சென்று வாழ்த்துக்களையும் கேக் வகைகள் கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கேக் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வு  மதுரை துணை மேயர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்...
தமிழகம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனுதவிகளை வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், லைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாயப்பு முகாமினை தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி, 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்கு ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான வங்கிக்கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், ஆகியோர் சிறப்புரை வழங்கியும், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையேற்றும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை. டாக்டர்.அதுல்யா மிஸ்ரா, , நில நிருவாக ஆணையர் எஸ்.நாகராஜன், செயல் உறுப்பினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டாக்டர்.கே.பி.கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பா.பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி (காரைக்குடி), ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை)...
தமிழகம்

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள வியாபார சங்க கட்டடத்தில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய கிளை நிர்வாகிகளுக்கு, சிறப்பு விருந்தினர்கள் விருது வழங்கி பாராட்டினார்கள். பின்னர் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், நுகர்வோர் தினம் தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், நுகர்வோர் கடமைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்தும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், புகார் அளிக்கும் இடம் குறித்தும், நிவாரணம் பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் சிறப்பு விருந்தினர்கள் அளித்தனர். உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் மற்ற பொருட்கள்...
தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சுதர்சனன் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றனர். நகரின் முக்கிய வீதிகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் மஞ்சள் பைகளை உபயோகிப்போம் கழிவுகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளரிடம் வழங்குவோம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பேரணி சென்றது. அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, வாடிப்பட்டி சமுதாய மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டம் என் அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் விமானத்தில் வரும் பயணிகளிடம் கொரோனா ஒப்புதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு அவர்களின் முகவரி மற்றும் காய்ச்சல், சளி தன்மை பதிவு செய்யப்பட்டு உள்ளது. 12 வயதுக்குட்பட்ட  பயணிகளிடம் காய்ச்சல் சளி தொந்தரவுகள் இருந்தால் பரிசோதனை செய்யப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு கொரோன தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸ் ஊசியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக கவசம், அணியவும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயனிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மதுரை...
தமிழகம்

சோழவந்தான் ஏழாவது வார்டில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஏழாவது வார்டு வட்ட பிள்ளையார் கோவிலில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஏழாவது வார்டு செயலாளர் டிரைவர் மணி, தங்கத்துரை, பாண்டி, அழகர், கென்னடி ,வாத்தியார் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான் ஏழாவது வார்டில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஏழாவது வார்டு வட்ட பிள்ளையார் கோவிலில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஏழாவது வார்டு செயலாளர் டிரைவர் மணி, தங்கத்துரை, பாண்டி, அழகர், கென்னடி ,வாத்தியார் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காமேகம், மதுரை மாவட்டம்...
1 357 358 359 360 361 557
Page 359 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!