தமிழகம்

தமிழகம்

மதுரையிலிருந்து டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்

அதிமுகவின் சட்ட விதிகளின்படி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தான் இருந்தோம்.  தற்போதுவரை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் இன்று வரை அப்படித்தான் கடிதம் அனுப்பி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்துவதாக வந்த செய்தி குறித்த கேள்விக்கு,  இதுவரை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மட்டுமே கடிதம் அனுப்பி உள்ளது வேறு எந்த முடிவும் அல்ல இது குறித்து தவறான தகவல்களை சிலர் அளிக்கின்றனர். தேர்தல் ஆணையம் மட்டுமல்ல வெளியிலும்  பல்வேறு குளறுபடிகளை செயற்கையாக சிலரால உருவாக்கப்பட்டுள்ளது.  பரிசு கொடுத்த கேள்விக்கு தமிழக விவசாயிகள் இந்த வருடமும் பொங்கல பரிசாக கரும்பு வழங்குவார்கள் என்ற தான் எண்ணி எண்ண தேவை என்று பயிரிட்டார்கள் அதை ஏற்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசு 5 ஆயிரம்...
தமிழகம்

தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

தென்காசியில் தமிழ்நாடு ஆரசு ஊழியர் சங்கத்தினர் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழைய ஓய்வூதியம், வரையறுக்கபட்ட ஊதியம், அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தரப்படுத்த வேண்டும், 01.07.22 முதல் வழங்கப்பட வேண்டிய 4% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு துறைகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மு. திருமலை முருகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை...
தமிழகம்

இராஜபாளையம் மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை போட்ட சட்டமன்ற உறுப்பினர் கலையரங்கம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரேஷன் கடை கட்டுவதற்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வரக்கூடிய சுகாதார வளாகம் கட்டும் பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார் அப்பொழுது பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் கலையரங்கம் கட்டிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதை சட்டமன்ற உறுப்பினர் அடுத்த நிதியில் கட்டித் தருவதாக உறுதி அளித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் இராஜபாளையம் யூனியன் துணைத் தலைவர் துரைகற்பகராஜ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை மொத்தமாக வழங்க வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்

இன்று ( 29.12.2022 ) வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பெரியகுளம் வட்டக்கிளை சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு 01.07.22 முதல் நிலுவை தொகையுடன் மொத்தமாக வழங்கிட வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெரியகுளம் அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் சு.குமார்செல்வன் தலைமையில் டி. தங்க மீனா சத்துணவு துறை மாவட்ட தலைவர் முன்னிலையிலும் நடைபெற்றது. துவக்க உரை கண்ணன் நெடுஞ்சாலைத்துறை . வாழ்த்துரை வழங்கியவர்கள் கிருஷ்ணமூர்த்தி கருவூலக கணக்கு த்துறை. பவானந்தம் மருத்துவத்துறை. மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் பட்டு வளர்ச்சி துறை, மணிகண்டன் கல்வித்துறை...
தமிழகம்

உசிலம்பட்டியில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் குடில்கள் அமைத்து குடியேற்றக் கோரி 5 நாட்கள் சலூன் கடையை அடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிக்கம்பட்டியில் 120க்கும் மேற்ப்பட்ட முடிதிருத்துவோர் நலச்சங்கத்தினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.ஆனால் இந்த இடம் ஒதுக்கப்பட்டதற்கு அதன் அருகில் குடியிருப்பவர்களும்; இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் இடம் அளவீடு செய்து கல் ஊண்டி இடம் ஒதுக்குவதில் பிரச்சனை இருந்து வருகின்றது.கடந்த ஒரு வருடத்தில் பலமுறை அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் இடம் அளவீடு செய்யச் சென்றாலும் ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக இடம் அளவீடு செய்யாமல் திரும்பியுள்ளனர்.இந்நிலையில் அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் குடில்கள் அமைத்து குடியேற்றக் கோரியும் இலவச பட்டா வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்தும் முடிததிருத்துவோர் நலச்சங்கத்தினர் 5 நாட்கள் சலூன் கடையை அடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உசிலம்பட்டிப்...
தமிழகம்

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலாகும்

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலாகும். இத் திருக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளாகவே, கோவிலில் உட்புற பகுதிகளில் முட்புதர்கள் பெருமளவில் குப்பை கிடங்குகளாக பராமரிப்பின்றி காணப்படுவதால், அதனுள் விஷமுடைய ஜந்துக்கள் பாம்புகள், தேள், பூரான் உள்ளிட்ட விஷமுடைய ஜந்துகள் நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். அலட்சியப் போக்கில் கோவில் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் அன்னதான கூடத்தில் அன்னதானம் உண்ணவரும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்குவதில்லை எனவும் , அங்கு கோயிலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு நீரையே சமைத்தும், பக்தர்களுக்கும் அதனையே குடிநீராக வழங்கப்படுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் இதற்கு...
தமிழகம்

கோயில் உண்டியலை உடைத்து நகை பணம் கொள்ளை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டுநீரேத்தான் கிராமம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோயில் ஊரின் முகப்பு பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாகவே சிவன் கோயில் உள்ள இடங்களில் எல்லாம் துர்க்கை அம்மன் சன்னதி இருக்கும் துர்க்கைக்கு என தனி ஆலயம் என்பது ஆசியாவிலேயே நான்கு இடங்களில் தான் உள்ளதாக சொல்லப்படுகிறது அதில் ஒன்றுதான் இந்த திருத்தலம். இந்தக் கோயிலில் நேற்று இரவு சரியாக 12 .58 உள்ளே நுழைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் சன்னதிக்கு முன்னால் உள்ள உண்டியலில் அடிப்பகுதியில் உள்ள கதவை உடைத்து பின் உண்டியலில் உட்புறத்தில் உள்ள தடுப்பையும் தகர்த்து எடுத்துவிட்டு உள்ளிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மஞ்சள் கலர் டி-ஷர்ட் மற்றும் ப்ளூ கலர்...
தமிழகம்

துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் பழநிக்கு பாதயாத்திரை

துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் 30 பேர் பழநிக்கு பாதயாத்திரையாக சென்றனர். நடிகர் அஜீத் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் துணிவு. இந்த படம் வெற்றி பெற வேண்டி மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் ரசிகர் மன்றத்தினர் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். பரவை ஏகாம்பரஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நிதியில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை கிளம்பினர். பரவை கார்த்தி தலைமையில் அஜீத் ரசிகர் மன்றத்தினர் பரவை ராகுல், ராக்கெட் ரஞ்சித், பிரசன்னா , ராஜா, உட்பட ஏராளமானோர் பாதயாத்திரையாக கிளம்பி சென்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பிரபல ரவுடி ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் கொலை வழக்கில் ஒருவர் கைது .நண்பனாக இருந்து செல்போனை திருடியதால் தலையில் கல்லைப் போட்டு கொலை நடந்த சம்பவம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாராம் மகன் ஜெயகுமார் (வயது 29) பிரபல ரவுடியான ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் இவர் மீது நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்தில் 4 வழிப்பறி, திருட்டு வழக்குகளும் செக்காணுரணி காவல நிலையத்தில் 3 வழிப்பறி வழக்குகள் உள்ளது. திருமணமாகத ஜெயக்குமார் வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்காக வழிப்பறி, திருட்டு செயல்களில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் நாகமலை புதுக்கோட்டை அரசினர் மாணவர் விடுதி வெளிப்புறத்தில் ஜெயக்குமார் விக்னேஷ் மற்றும் 3 பேர் குடிபோதையில் இருந்துள்ளனர்.  அப்போது ஜெயகுமார்  போதையில் இருந்த விக்னேஷ் மற்றும் நண்பர்கள் செல்போனை திருடி செக்கானூரணியில் விற்றதாக விக்னேஷ் சிற்கு தெரிய வந்தது. இது குறித்து விக்னேஷ் மற்றும் நண்பர்கள் நேற்று இரவு செல்போன் விற்றது தொடர்பாக ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளனர்.  அப்போது ஜெயக்குமார் தகராறில் ஈடுபடவே ஆத்திரமடைந்த விக்னேஷ் ஜெயக்குமாரின் தலையில் கல்லை போட்டு கொலை...
தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி பயிற்சி

கெங்கவல்லியில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உலவர் நலத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கெங்கவள்ளி அருகே வலசக்கல்பட்டி மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ்வு மக்கள் நாட்டு வெற்றிகளை மற்றும் வெள்ளை வெற்றிலை அதிகம் சாகுபடி செய்து வருகிறார்கள் மக்களிடம் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் நேரில் சென்று வெற்றிலை சாகுபடி செய்யும் முறையை குறித்து கேட்டறிந்தனர் தொடர்ந்து அவர்கள் சேர்ந்து வெற்றிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்கள் நெறிமுறைகள் வாழ்வாதாரங்கள் கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனர் இந்த கள ஆய்வின் போது கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா உதவி அலுவலகர் கல்பனா. சந்திரசேகர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடன்இருந்தனர் ....
1 354 355 356 357 358 563
Page 356 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!