தமிழகம்

தமிழகம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது

விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டத்தின் துணை ஆட்சியர், டி.ஆர்.ஓ மற்றும் பல்வேறு வேளாண் மற்றும் இதர துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களின் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதில் எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சார்ந்த இறுதி ஆண்டு மாணவிகள் வசுந்தரா தேவி, வெள்ளி மலர், வித்ய பாரதி, விஜய பிரியா, விலாசினி, வினோதினி, யாழினி, யோக நிவாஷினி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் மனுவைப் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறை நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி கே சிங் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைக்கவில்லை.  மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை குறித்து மறு பரிசோதனை செய்யப்படுகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் கூடுதல் விமான சேவைகளை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் வெளிநாட்டு விமானங்கள் வந்து போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையில் துவங்கும். இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைகளுக்கான விமானங்கள் வந்தால் குறிப்பாக இரவு 2 மணி அளவில் விமானங்கள் வந்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய சுங்க இலாகா மையம் சேவை செயல்பட்டு...
தமிழகம்

டெல்லியிலிருந்து விமான மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறை நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி கே சிங் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு.

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைக்கவில்லை-மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை குறித்து மறு பரிசோதனை செய்யப்படுகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் கூடுதல் விமான சேவைகளை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது - அதன் அடிப்படையில் வெளிநாட்டு விமானங்கள் வந்து போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையில் துவங்கும். இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைகளுக்கான விமானங்கள் வந்தால் குறிப்பாக இரவு 2 மணி அளவில் விமானங்கள் வந்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய சுங்க இலாகா மையம்...
தமிழகம்

மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு இரண்டு நீர் பிடிப்பு இடங்களை உச்ச நீதிமன்ற ஆணையின்படி வகை மாற்றம் செய்ய வேண்டிய தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. எம்.பி சு. வெங்கடேசன் பேட்டி

சென்னையில் இருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில். மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த கேள்விக்கு.. கடந்த நான்கு மாதங்களில் ஆறு முறை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மதுரை வந்து சென்றுள்ளார். இத்தனை முறை வந்து சென்றாலும் மதுரை விமான நிலையம் குறித்து கேட்க மறுக்கிறாரா? அல்லது திசை திருப்புகிறாரா? என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினேன் அதற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் திசை திருப்பக் கூடிய பதிலாகவே அளித்துள்ளார். இரவு நேரங்களில் விமானங்கள் இயங்கவில்லை என கேட்டால் விமான நிலையம் இரவு நேரங்களில் இயங்கவில்லை...
தமிழகம்

மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு – மேலக்கால் அருகே ரோட்டில் வீணாகும் குடிநீர்

மேலக்கால் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்களுக்கு தண்ணீர் கொண்டு செ மதுரை மாநகர் மக்களின் தேவைக்கேற்பல்லப்படுகிறது. இக்குழாயானது மேளக்காடு அருகே காராபட்டி குடிமங்கலம் கீழமாத்தூர் கவரிமான் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் ஆறாக ஓடுகிறது. குறிப்பாக.துவரிமான் மேலக்கால் ரோட்டில் உள்ள மேலமாத்தூர் கொடிமங்கலம் பகுதிகளில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.  கடந்த இரண்டு மாதங்களாக இதனை சரி செய்யாததால் ஏராளமான குடிநீர் வீணாகிறது.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது குடிநீர் குழாயின் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது தற்போது நீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைமை உள்ள நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பட்டதாரி இளைஞர்கள்

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 16 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் வேலைகளில் காலை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கள் காளைகளும் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலுடன் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பட்டதாரி இளைஞர்கள் சிலர் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பிரகாஷ் சூர்யா மணி திருவாசகம் பால்பாண்டி உள்ளிட்ட பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் அவரவர் தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தயார் படுத்தி வருகின்றனர். இது...
தமிழகம்

சிவகாசி, வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ், சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்பீட்டர் ஆகிய இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதுடன், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து பொது மக்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். எஸ்.பி. பரிந்துரையின் பேரில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில்...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சியின், அதிகாரிகளின் வாகனம் பழுது வண்டியை தள்ளிவிட்டு இயக்க வேண்டிய அவலம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. நிர்வாக வசதிகளுக்காக சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருத்தங்கல் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் அதிகாரிகள் பயன்படுத்தும் ஜீப் வாகனம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எங்காவது செல்ல வேண்டும் என்றால், இந்த வண்டியை நான்கு பேர் சேர்ந்து தள்ளிவிட்டு இயக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது. மேலும் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்களும் மோசமான நிலையில் உள்ளது என்று ஊழியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள், மாநகராட்சியின் வாகனங்களை பழுது நீக்கி நல்ல நிலையில் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்க கூட்டம்; பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்த முக்கிய தீர்மானம்

தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை, 2023 ஆம் ஆண்டு டைரி மற்றும் மாத, தினசரி காலண்டர்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி பத்திரிகையாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சு.இராசேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி பிரஸ் கிளப் தலைவர் கணபதி. பாலசுப்பிரமணியன் மற்றும் தென்காசி மாவட்ட பிரஸ் கிளப் தலைவர் பா.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பத்திரிகையாளர்...
தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைக்கு, ஜாதி வண்ணம் பூச வேண்டாம் – அனைத்து விவசாயிகள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் நடைபெறுவது வழக்கம். இன்று அவனியாபுரம் கிராம மக்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பல ஆண்டுகளாக தென்கால் விவசாய பாசன சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஜாதி ரீதியாக அமைப்பை உருவாக்கி ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த முயற்சி செய்து ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வருகின்ற 2023 ஜல்லிக்கட்டு போட்டியை ஜாதி ரீதியாக தனி அமைப்பினர் நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது எனவும்,அவனியாபுரம் பகுதி விவசாயிகள் காளை வளர்ப்போர் மாடுபிடி வீரர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என, அவனியாபுரம் பகுதி விவசாயிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம்...
1 354 355 356 357 358 557
Page 356 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!