சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது
விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டத்தின் துணை ஆட்சியர், டி.ஆர்.ஓ மற்றும் பல்வேறு வேளாண் மற்றும் இதர துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களின் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதில் எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சார்ந்த இறுதி ஆண்டு மாணவிகள் வசுந்தரா தேவி, வெள்ளி மலர், வித்ய பாரதி, விஜய பிரியா, விலாசினி, வினோதினி, யாழினி, யோக நிவாஷினி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் மனுவைப் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
