தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் அருகே ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற 88 வது ஆண்டு பூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் – பிரியாணி திருவிழா என்று அழைக்கப்படும் இரண்டு நாட்களாக கம கம பிரியாணி வாசனையில் தத்தளிக்கும் கிராமம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் , ஸ்ரீ முனியாண்டி சுவாமி - க்கு தாய்க் கிராமமாக கருதப்படும் இக்கிராமத்தில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டு ஆங்காங்கே ஸ்ரீ முனியாண்டி சுவாமி - க்கு திருக்கோயில் அமைந்ததாக வரலாறு கூறப்படுகிறது .  இந்நிலையில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று திருக்கோயிலில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில் உணவகம் நடத்தும் தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக கடைக்கு விடுமுறை அளித்து , இக்கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்று கூடி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வதுடன், முன்னதாக நேற்று இரவு ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வீட்டில் இருந்து சுவாமிக்கு பூஜை பொருட்களான பழங்கள், மலர் உள்ளிட்டவற்றை தலைசுமையாக ஊர்வலமாக எடுத்து புறப்பட்டு, திருக்கோயிலை அடைந்து பூஜை நடத்தினர். இவ்விழாவிற்காக ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில்...
தமிழகம்

சிவகாசி அருகே, தனியார் நூற்பாலை திறப்பு விழா – அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி - எம்.புதுப்பட்டி அருகேயுள்ள செவலூர் பகுதியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 78 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தனியார் நூற்பாலை அமைக்கப்பட்டது. இந்த புதிய நூற்பாலையை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம்தென்னரசு பேசும்போது, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அங்கமான வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒற்றைச் சாளர வசதிகள் வழங்கிடும் முகமையாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிவகாசி அருகேயுள்ள செவலூரில், ஸ்ரீசர்வலோகா நூற்பாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 78 கோடி ரூபாய்...
தமிழகம்

கவர்னர் விருது பெற்ற, மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடந்த 2022ம் ஆண்டிற்கான தேர்தல் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியர் மாரிச்செல்வி, சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றிய முருகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆளுநரிடம் விருது பெற்ற தனி வட்டாட்சியர் மாரிச்செல்வி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை சந்தித்து, விருதுகளை வழங்கி வாழ்த்துகள் பெற்றார். ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், தனி வட்டாட்சியருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள். சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். -சீமான் பேச்சு

மறைந்த புலவர் தமிழ் கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கட்சி...
தமிழகம்

கீழப்பாவூர் பகுதியில் தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு நடத்தும் தென்னிந்திய அளவிலான 4ஆம் ஆண்டு ஆண்கள், பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி ஜன.27 துவங்கி 29 வரை 3 நாட்கள் கீழப்பாவூரில் நடைபெறுகிறது. இப்போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் விளையாட்டுக்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.சுபா தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் விளையாட்டுக் குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் விளையாட்டு குழுவின் கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு தலைவர் சு.மனோகரன், கௌரவ தலைவர் ச.செல்வன், தென்காசி மாவட்ட கபடி கழக செயலாளர் நல்லாசிரியர் அருள் இளங்கோவன், விளையாட்டுக்குழு துணைத் தலைவர் கே.பி.சுரேஷ், செயலாளர் ஜி.வைகுண்டராஜ், சட்ட ஆலோசகர் கே.ஆர்.பி.பிரபாகரன், பொருளாளர் பொ.அருணாசல முத்துச்சாமி, துணைச் செயலாளர் இசக்கிமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வி, கா.ராஜாமணி, ஆர்....
தமிழகம்

சிவகாசியில், ரத்த தான முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. அனந்தப்ப நாடார் தெரு, பாரதி பஜனை மண்டபத்தில், கிங் மேக்கர் சமூக நல இயக்கம் மற்றும் சிவகாசி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாமை, சிவகாசி நகராட்சி முன்னாள் சேர்மனும், சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஞானசேகரன் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அய்யனார் தலைமையில் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு ரத்த தான முகாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை கிங் மேக்கர் சமூக நல இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ராஜபாளையத்தில், வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில், வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி துவக்கி வைக்கப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகள் வழியாக, காந்தி சிலை வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் சேத்தூர், சேவுகபாண்டியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சிவகாசி அருகே, வீட்டிற்குள் புகுந்து 60 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரே நாளில், அடுத்தடுத்து இருந்த 4 வீடுகளுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம், தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (67). இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததையறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகைள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் இதே பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (62) என்பவரது வீட்டில் இரண்டரை கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 800 ரூபாய் பணமும் திருட்டு போனது. இதே போல சிவசிதம்பரம் (29) என்பவரது வீட்டிலிருந்து 2 கிராம் தங்க நகை திருடு போனது. மேலும்...
தமிழகம்

மதுரையில் வழிகாட்டி மணிகண்டனுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.  ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதன்படி மதுரையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமூக சேவைகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகள் மற்றும் பசுமை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வழங்கி வாழ்த்தினார். மேலும் இந்த விருது...
தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சோனியா – கலைஞர் கொண்டுவந்த சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த வேண்டும் தமிழக வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம். தமிழக காங்கிரஸ் தலைவர் -கே.எஸ்.அழகிரி

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்டம் தேவை பற்றி மக்களிடையே பரப்புவதற்காக திராவிட கழகம் இன்று கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர் அதில் கலந்து கொள்வதற்காக நான் வந்துள்ளேன். சேது சமுத்திரம் திட்டம் என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டம் . அன்னை சோனியா காந்தி பொறுப்பேற்று இருந்தபோது கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே தென் தமிழகத்திற்கு சேது சமுத்திர திட்டம் வேண்டும் என சொல்லி இருக்கின்றனர். எனவே தமிழர்களின் ஒட்டுமொத்த விருப்பம் இது. சேது சமுத்திர திட்டம் 2500 கோடி ரூபாய் திட்டத்தில் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் செலவு செய்த பிறகு. அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.  அந்தத் திட்டம் நிறுத்துவதற்கு சொல்லப்பட்ட...
1 313 314 315 316 317 563
Page 315 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!