தமிழகம்

தமிழகம்

இராஜபாளையத்தில் அடுப்பில்லா சமையலில் 100 நபர்கள் 100 விதமான உணவுகளை ஐந்து நிமிடம் 13 வினாடிகளில் செய்து முதல் நோபல் உலக சாதனை படைந்தனர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் மற்றும் நம் பாரம்பரிய உணவுகளை இளைஞர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சரண்யா என்ற சமூக ஆர்வலர் 100 நபர்களை வைத்து 100 விதமான இயற்கை உணவுகளை அடுப்பில்லாமல் சமையல் செய்து சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு .  இந்த சாதனையில் தேனி. விருதுநகர். மதுரை .உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 நபர்கள் கலந்து கொண்டு நோபல் உலக சாதனை நடுவர்கள் மத்தியில் சாதனை முயற்சி ஈடுபட்டனர் . இந்த முயற்சியில் ஐந்து நிமிடம் 13 வினாடிகள் 100 நபர்களும் 100 விதமான இயற்கை உணவுகளை செய்து சாதனை படைத்தனர் நோபல் உலக சாதனை நடுவர்கள் டாக்டர் அரவிந்த். ஹேமத்குமார். வினோத்குமார். பரணிதரன்.ஆகியோர் உணவுகளை ருசித்து பார்த்து...
தமிழகம்

இராஜபாளையம் அருகே முகவூரில் இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி மாநில அளவிலான மாபெரும் விழிப்புணர்வு மராத்தான் போட்டி 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. மாநிலத்திலிருந்து 16 மாவட்டத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் இந்த போட்டியானது நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 21 கிலோமீட்டர் மற்றும் 7 கிலோமீட்டர் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்காக 3 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியினை இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் மற்றும் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரத்தான் போட்டிகளை துவக்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டு...
தமிழகம்

இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி 24 வது பகுதி மக்கள் முறையான குடிநீர் வழங்க கோரியும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ராஜபாளையம் டு சத்திரப்பட்டி செல்லும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . பகுதி மக்கள் கூறும்பொழுது 15 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதாகவும் அதனை முறைப்படுத்தி குடிநீர் வழங்க வேண்டும் அதேபோல் இந்த பகுதியில் பேருந்து நின்று செல்வதற்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என கோரியை வைத்து...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் 2000 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கண்பார்வை குறைபாடு உள்ள நபர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமை திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கபாண்டியன் துவக்கி வைத்தார். உடன் ராஜபாளையம் திமுக வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா, தெற்கு நகர கழக செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பயனாளிகளுக்கு கண் பார்வை திறன் மற்றும் கண் பார்வைத் திறன் குறைபாடு மருத்துவர்கள் மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டது. செய்தியாளர் :...
தமிழகம்

சிவகங்கையில் விளையாட்டுப் போட்டி

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில், மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை விளையாட்டு போட்டியை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்களின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர், தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் வெற்றி பெற்ற சுமார் 1000 மாணவிகள் 1600 மாணவர்கள் என மொத்தம் 2600 மாணவ மாணவிகள் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டியில், முதல் இரண்டு நாட்கள் மாணவிகளும், அடுத்த இரண்டு நாட்கள்...
தமிழகம்

மண் காப்போம் இயக்கத்திற்காக பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் – 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி

மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த ஊரான பிரான்சின் டூலோன் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிள் ஓட்டி, டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று (ஜனவரி 29) வருகை தந்தார். உளவியலாளரான நதாலி அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்காக சத்குரு அவர்கள் தனிநபராக மேற்கொண்ட 30,000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் தான்...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – திமுக கவுன்சிலர் மீது, மதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில், சிவகாசி பகுதியைச் சேர்ந்த 24 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கருத்து கேட்பு கூட்டத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது பாஜக கவுன்சிலர் குமரி பாஸ்கருக்கும், மதிமுக கவுன்சிலர் ராஜேஷிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் பாஜக கவுன்சிலருக்கு ஆதரவாக, திமுக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் வெயில்ராஜ், மதிமுக கவுன்சிலர் ராஜேஷை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து வெளியேறிய ராஷேஸை, வெயில்ராஜ் தாக்க முயன்றார். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து தனக்கு கொலை...
தமிழகம்

ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், மகத்தான வெற்றி பெறும். சாத்தூர் திருமண விழாவில், கனிமொழி எம்.பி பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில், திமுக கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறும் என்று எம்.பி. கனிமொழி கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியில், தர்மதுரை திரைப்பட புகழ், தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி பேசும்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி என்பது நிச்சயமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தான் என்று உறுதியான ஒன்றாகியுள்ளது. பெருவாரியான வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். அதிமுக கட்சியில் தலைவர்களுக்கிடையே...
தமிழகம்

புளியங்குடியில் இரண்டாம் நிலை காவலர் மாதிரி தேர்வு

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி மாதிரி தேர்வு நடந்தது. இதில் அதிகமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளையின் TNPSC பயிற்சி மையம், புளியங்குடி மருதம் பயிற்சி மையம் மற்றும் புளியங்குடி போதி பயிற்சி மையம் இணைந்து புளியங்குடி காவல் துணை ஆய்வாளர் செல்வம் மாணிக்கம் தலைமையில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி மாதிரி தேர்வு நடைபெற்றது. புளியங்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடந்த இத்தேர்வில் மாணவ, மாணவியர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் பார்ட் கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முஹைதீன், செயலாளர் அப்துல் பாஸித், பொருளாளர் சேக் அப்துல் கரீம், பார்ட் உடற் பயிற்சி ஆசிரியர் பால்கனி, செயற்குழு...
தமிழகம்

வேலூருக்கு வரும் 1-ம் தேதி முதல்வர் வருகையொட்டி ஆய்வு பணியை மேற்கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள விழா அமைய உள்ள இடத்தினை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வேலூர் எம்.பி.கதிர்ஆனந், ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
1 311 312 313 314 315 563
Page 313 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!