தமிழகம்

தமிழகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க திரண்ட கிராம மக்கள்

மதுரை அருகே மினரல் வாட்டர் நிறுவனத்தை கட்டுப்படுத்த கோரி கிராம மக்கள் மனு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  மதுரை அருகே பனையூர் கிராமத்தில், கன்மாய் அருகே தனியாருக்கு சொந்தமான மினரல் வாட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால், இப்பொழுது அதில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் ,  மேலும் ,சுத்திகரிப்பு தண்ணீரை அருகில் உள்ள பொதுப்பணித்துறை கால்வாயில் கலக்க விடுவதால், விவசாயங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக இப்பதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இது தொடர்பாக, மதுரை சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும், மினரல் வாட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சிய அலுவலகத்திற்கு வந்து தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தை கட்டுப்படுத்த கோரியும் ஆலையை அதிகாரி பார்வையிட்டு உரிய...
தமிழகம்

திருவில்லிபுத்தூரில், அடிப்படை வசதிகளை செய்து தராத, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகர்மன்ற தலைவராக திமுக கட்சியைச் சேர்ந்த ரவிக்கண்ணன் உள்ளார். 33வது வார்டு கவுன்சிலராக, திமுக நகர செயலாளர் அய்யாவுபாண்டியன் இருந்து வருகிறார்.  இந்த நிலையில் 33வது வார்டு பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் மற்றும் கோவிந்தன் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்த பகுதியில் குடிநீர் வசதி, கழிவு நீர் வாறுகால் வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாததால், இந்தப் பகுதியின் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்று நோய்களை பரப்பும் கூடாரமாக உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை...
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் நடந்த குற்ற சம்பவங்கள்

அவனியாபுரத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை  அவனியாபுரம் எம் .எம். சி காலனி ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான் மகள் மீனாட்சி...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் தை வைரத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு – குன்றத்து முருகனுக்கு நாளை தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகை முன்னிட்டு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் தெப்ப திருவிழாவும் ஒன்று. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் சேஷ வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகை முன்னிட்டு தெப்ப முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு...
தமிழகம்

திருமங்கலம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் நடைபெறும் கட்டுமான பணிகளை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, கடந்த பல வருடங்களாக திறந்த வெளியில் செயல்பட்டு வந்ததால், மழைக்காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகமெங்கும் உள்ள நெல் மூடைகள் சேமிப்பு கிடங்குகளை பாதுகாப்பதற்காக , இரும்பினால் ஆன கூடாரங்கள் அமைத்து நெல் மூடைகளை பாதுகாக்க உத்தரவிட்டதையடுத்து, தோப்பூரில் அமைந்துள்ள கிட்டங்கியில் 18000 டன் மெட்ரிக் கொள்ளளவு கொண்ட நெல் மூடைகளை சேமிக்கும் அளவிற்கு, கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருவதை , தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறும் போது , தமிழ்நாடு முழுவதும் 213 கிட்டங்கியில் ரூபாய் 138 கோடியில் 2.86...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கொடிக்குளம் கிராமம். இக்கிராமத்தில் சின்னக்கண்மாய் பெரியகண்மாய் என இரு கண்மாய்கள் உள்ளன.இக்கண்மாய்களை ஏலம் விட இக்கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கண்மாய் ஏலம் விடுவது பலமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சின்னக்கண்மாய் ஏலம் விடப்பட்டதாகவும் பெரியகண்மாய்க்கு இன்று ஏலம் விட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு ஆத்திரமடைந்த கிராமமக்கள் கண்மாய் ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கொடிக்குளம் உள்பட 5 கிராம மக்கள் ஏலம் நடைபெற இருக்கும் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் உள்ள நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது..சம்பவமறிந்த அதிகாரிகள் கிராமமக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்றைய ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் போடி அணி வெற்றி.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவேங்கடம் நினைவு கூடைப்பந்து குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவில் ஆண்களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு திடலில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 14 அணிகள் பங்கேற்றது. போட்டிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதலில் நாக்கவுட் முறையிலும், நான் அவுட் முறையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு லீக் சுற்றும் முறையிலும் போட்டிகள் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் போடி கூடை பந்தாட்ட கழகமும், பெரியகுளம் திருவேங்கடம் குடைப்பந்தாட்ட கழகமும் போட்டியிட்டதில் போடி கூடை பந்து கழகம் 84க்கு 77 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று போடி கூடை பந்தாட்ட கழக அணி கோப்பையை வென்றது. முன்னதாக...
தமிழகம்

வேலூரில் தமிழக எழுத்தாளர் சங்கம் சார்பில் கவிஞர்களுக்கு பாராட்டு விழா

வேலூர் கேரள சமாஜ் மண்டபத்தில் தமிழக எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் ம.நாராயணன், ஆற்காடு கவிஞர் மா. ஜோதி, முனைவர் பட்டம் பெற்ற கவிஞர் ச.லக்குமிபதி ஆகியோருக்கு பாராட்டு விழாவும், பொங்கல் விழாவும் நடந்தது. கவிஞர் பிரவீன்ரவி வரவேற்றார். தொடக்க உரையை நாடக சிற்பி வேலூர் ராதாகிருஷ்ணன் ஆற்றினார்.ரா.சீனிவாசன், எஸ்.ரமேஷ்கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கவிஞர் அ.பெர்னார்ட்ஷா தலைமை தாங்கினார் திருப்பத்தூர் தூயநெஞ்சகல்லூரி தமிழ்த்துறை தலைவர் பொன்.செல்வக்குமார் சிறப்புரையாற்றினார். கவிஞர்கள் பாரிதாசன், வேல்முருகன், ரமேஷ், பொறியாளர் வெங்கடேசன், சாந்தா, கார்த்திகேயன், சம்பத் ஆகியோர் பேசினர். கவிஞர் கோ.ராஜேந்திரன் நன்றி கூறினார். ஏற்பாட்டை தமிழக எழுத்தாளர் சங்க தலைவர் பெர்னார்ட்ஷா, செயலாளர் பாரிதாசன், பொருளாளர் வேலூர் ராதாகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

வேலூர் அருகே பாலமதி மலையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பாலமதி மலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பாகாயம் காவல்துறைக்குதகவல் கிடைத்தது. உடனடியாக வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் பி எஸ் பி திருநாவுக்கரசு மற்றும் பாகாயம் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரோதபரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு தீவிர சிசிடி விமூலம் விசாரணை செய்ததில் இந்தப் பெண்ணை கொலை செய்த நபர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் ரமேஷ்பாபு என்பவரின் மகன் கார்த்தி (22)என்று தெரியவந்தது உடனடியாக கார்த்திகை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வேலூர் காட்பாடி விஜிராவ்நகரில் வசித்து வந்த கார்த்திக் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் ஏசி மெக்கானிக்காகவேலை செய்து...
தமிழகம்

வேலூருக்கு வரும் 1-ம் தேதி முதல்வர் வருகை, காட்பாடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியாளர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்

வேலூர் மாவட்டத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அருகில் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
1 310 311 312 313 314 563
Page 312 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!