வேலூருக்கு நாளை முதல்வர் வருகை’ கள ஆய்வில் முதலமைச்சர். என்ற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க நாளை 1-ம்தேதபுதன்கிழமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காலை ரயில் மூலம் மதியம் 12.30 மணியளவில் காட்பாடி ரயில்நிலையம் வருகின்றார். அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.பின்பு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்விசார்ந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.பின்பு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது..பின்பு தனியார் ஓட்டலில் தங்கிவிட்டு மாலை வேலூர் விஐடி சென்று கட்டிடம் ஒன்றை திறந்துவைக்கிறார். மறுநாள் 2-ம் தேதி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டம் குறித்து ஆய்வு செய்கிறார், முதல்வர் வருகையொட்டி வேலூர் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2 டிஐஜிக்கள், 6எஸ்பிக்கள் மற்றும் 3 ஆயிரம்...
