மதுரையில் வழிகாட்டி மணிகண்டனுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதன்படி மதுரையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமூக சேவைகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகள் மற்றும் பசுமை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வழங்கி வாழ்த்தினார். மேலும் இந்த விருது...






