தமிழகம்

தமிழகம்

சோழவந்தான் அருகே இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார் மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி...
தமிழகம்

ஆவின் பால் மறைமுக விலையேற்றம் – பால் முகவர்கள் சங்கம் பரபரப்பு கண்டனம்

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது; கடந்த வாரம் கோவை மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் பால் முகவர்களோடு...
தமிழகம்

நிலக்கோட்டை அருகே இரு பிரிவினர் இடையே நடந்த மோதலால் நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த கும்பாபிஷேகம்; வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை: கிராம மக்கள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது மேற்கண்ட இரண்டு ஊர்...
தமிழகம்

கழிவறை இல்லாத சின்னகட்டளை அரசு இருபாலர் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு 5.5 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதியுடன் புதிய கழிவறை கட்டி பயன்பாட்டிற்கு வழங்கிய இளைஞர்கள்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னகட்டளை கிராமத்தில் இயங்கி வரும் அரசு இருபாலர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக அதிநவீன முறையில் 5.5 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை...
தமிழகம்

மனிதநேய வார நிறைவு விழா

மனிதநேய வார நிறைவு விழாவில், 66 பயனாளிகளுக்கு ரூ.51.16 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,  மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தில் மனித நேய நாளாகவும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் எவ்வித பாகுபாடுன்றி ஒற்றுமையுடனும் மனிதநேயத்துடனும் வாழ்ந்திடும் பொருட்டு, மனிதநேய வார நிறைவு விழா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மனிதநேயத்தை எல்லோரும்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம் நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நாளை 1-ம் தேதி வேலூர் வருகைத் தரும் முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில் உதவி ஆணையர் செந்தில்குமரன், பொறியாளர் செந்தில்குமார்.மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, ரமேஷ், டீட்டா சரவணன் உள்ளிட்ட கவுன்சிலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான்அருகே பண்ணை வீட்டில் முன்னால் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி எளிய முறையில் கொண்டாடினார்

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு க அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் உடன் நலத்திட்ட உதவிகள் வழங்கி.எளிய முறையில் கொண்டாடினார் சில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று மதுரை வந்தபோது தன்னை சந்தித்து ஆசி பெற்றதன் காரணமாக சில ஆண்டுகளாக பிறந்தநாள் கொண்டாடாமல் இருந்த முக அழகிரி நேற்று சோழவந்தான் அருகே தென்கரை பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்கள் மற்றும் பண்ணை வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுடன் பிறந்த நாளை எளிய முறையில்.கொண்டாடி அவர்களுக்கு உதவிகள் வழங்கினார் இதில் கவுன்சிலர்கள் முபாரக் மந்திரி குட்டி மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார் கோபிநாதன் மற்றும்.ராஜ்குமார் விக்கிரமங்கலம் உல்லாசம்.பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது குருவித்துறை மன்னாடி மங்கலம் தாமோதரன் பட்டி ஐயப்பன் நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இருந்து மஞ்சள் நீராடி ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், ஆதரவற்ற சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 64 லட்சம் செலவில் 64 சாலையோர வியாபாரிகளுக்காக நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வசிக்கும் ஆதரவற்ற சாலையோர வியாபாரிகள், சாலையில் மண் தரையில் சுகாதாரமின்றி பழங்கள் , காய்கறிகள் விற்பதை தடுப்பதற்காக, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை எண்ணி, எவர்சில்வர் உலோகத்தால் ஆன தள்ளு வண்டியை நகராட்சி அலுவலகத்தின் தலைவர் ரம்யா, மற்றும் துணைத்தலைவர் ஆதவன் ஆகியோர் வழங்கினர். இதற்கான மொத்த மதிப்பு 64 லட்சம் ஆகும் . இதில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பவர்களும், மாற்றுத்திறனாளி உட்பட பூ விற்கும் தொழிலாளர்களுக்கும் இது போன்ற வாகனங்கள் மிக்க பயனுள்ளதாக அமையும். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு விருது

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறந்த சிகிச்சை மற்றும் செயல்பாடுகளுக்கான தமிழ்நாடு அரசின் மாநில அளவிலான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டுச் சான்றிதழை பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த வருடம் அதிகமான பயனாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு மாநில அளவில் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டது. மருத்துவமனைகளின் வரிசையில் தென்காசி மாவட்டத்தில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் ஜனவரி 26, 74 வது குடியரசு தினத்தன்று வழங்கினார். தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டுச் சான்றிதழை பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும்...
1 308 309 310 311 312 563
Page 310 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!