தமிழகம்

மதுரை அருகே 300க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி.மாணவர்கள் பாஜகவில் இணைப்பு

188views
மதுரை மாநகர் பகுதியான வில்லாபுரம் நரிமேடு ஆரப்பாளையம் செல்லூர் மதிச்சியம் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்துசட்டக் கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகளில் படிக்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வீரமணி ஏற்பாட்டில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசிந்தரன் அவர்களை சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இவர்களிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி மோடி அவர்களை மீண்டும் இந்திய திருநாட்டின் பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆதி குளோபல் ஆதிசங்கர் இளைஞர் அணி பார்வையாளர் கார்த்திக் உள்ளிட்ட பாஜகவினர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!