உலகம்உலகம்செய்திகள்

பாகிஸ்தான்: கராச்சியில் மீண்டும் பொதுமுடக்கம்

64views

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தினசரி கரோனா தொற்று அபாயகரமான அளவு அதிகரித்து வருவதால், வா்த்தக மையமான கராச்சி நகா் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கம், ஆக. 8-ஆம் தேதி வரை தொடரும். மத்திய அரசு மற்றும் வா்த்தக அமைப்புகளின் எதிா்ப்பையும் மீறி மாகாண அரசு இந்தப் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.

அண்மையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளின் விளைவாக சிந்து மாகாணத்தில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!