தமிழகம்

மாநில அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மாணவனுக்கு பள்ளி மற்றும் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு

109views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவன் பே.வசந்தகுமார் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டி திருவண்ணாமலை யில் நடைபெற்ற 63வது மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் பங்கேற்ற வசந்தகுமார் மாநில அளவில் இரண்டாவது பரிசு பெற்றார்.
இவரை பாராட்டும் விதமாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர் மற்றும் கிராம மக்கள் சார்பில் இவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். கிராம எல்லையில் இருந்து சாதனை மாணவர் வசந்தகுமார் மற்றும் உடல் கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோரை பொன்னாடை, மாலை அணிவித்து பள்ளிச் செயலாளர் பாலாஜி , தலைவர் லட்சுமண , உப தலைவர் ஜெய் கணேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தர்மராஜ் மற்றும் உறவின்முறை தலைவர் ராமசாமி , பொருளாளர் ராதாகிருஷ்ணன் நாடார், செயலாளர் கள்ள கொண்ட ராஜன் நாடார், கணக்கர் முத்தையா நாடார் ஆகியோர் வரவேற்று ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்து வந்தனர். பள்ளியில் நடைபெற்ற பாராட்டு கூட்டத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் வரவேற்று பேசினார்.
மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ் உள்பட அனைத்து ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!