தமிழகம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள பெருமாள்பட்டி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

41views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் காஞ்சிபுரத்தில் 03.002.2023 முதல் 06.02.2023 வரை பாரதியார் நினைவு தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பெருமாள் பட்டி பள்ளியில் 10-11ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் நித்யா பிரியதர்ஷினி ஜெயந்தி உள்பட 9 மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.மேலும் மாணவர்கள் ஆறுதல் பரிசைப் பெற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மெடல்கள் அணிவித்து சான்றுதழ்களும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு அவர்களை பாராட்டும் விதமாக ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனர் . இதில் பெருமாள்பட்டி பள்ளி மாணவ மாணவிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் இப்பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!