தமிழகம்

சிவகாசி அருகே, பதவி உயர்வு பெற்ற, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு பாராட்டு விழா

105views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள, கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனையில் தலைமை முதுநிலை, குடிமை பொறுப்பு மருத்துவராக இருந்து வருபவர் டாக்டர் பாபுஜி. பல ஆண்டுகளாக இந்தப்பகுதியில் பணிபுரிந்து வரும் டாக்டர் பாபுஜி தற்போது பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலை மாவட்டம் சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்லமநாயக்கர்பட்டி மருத்துவமனையில் சிறப்பாக சேவை செய்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனை (பொ) மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷிணி தலைமையில், டாக்டர்கள் செல்வராஜ், நவீன்குமார், சசிகலா, வெங்கடேஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், செவிலியர் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, அலுவலக கண்காணிப்பாளர் கோகிலாதேவி வரவேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க அலுவலரும், முதுநிலை குடிமை மருத்துவருமான டாக்டர் பொன்னுச்சாமி, டாக்டர் பாபுஜிக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அரசு மருந்து கிடங்கு அலுவலர் ராமச்சந்திரன், ஆடிட்டர் சீனிவாசன், கல்லமநாயக்கர்பட்டி அனைத்து மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். முதுநிலை கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!