கவிதை

பூக்கும் கண்ணாடி

150views
எனக்கும் வேண்டும்
எனக்கும் வேண்டுமென
ஒவ்வொருவராக மாற்றி அணிந்து
தாத்தாவின் சாயலை சொந்தமாக்கி
விளையாடிய மூக்கு கண்ணாடி
தவறி விழுந்து சிறு
விரிசல் விழுகையில்
பாவமென முகத்தை வைத்து கொண்டு
தாத்தாவை பார்க்கும் பேரக்குழந்தைகளை
செல்லமாக குட்டு வைத்து விரட்டிய பின்
கீழே விழுந்த மூக்கு கண்ணாடியை
கையில் எடுத்து பத்திரப்படுத்துகிறார்
குழந்தைகளை காணாத நேரங்களில்
மூக்கு கண்ணாடியின் விரிசல்கள்
நினைவு பூக்கும் கண்ணாடியாகிறது….

நிழலி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!