தமிழகம்

ஆபத்தான நிலையில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்கால் விரைந்து சரி செய்ய கோரிக்கை

78views
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாவினிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நா.கோவில்பட்டி பகுதியில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்கால் உள்ளது இந்த வாய்க்காலை கடக்க 22 (L) LS 10678 M என்ற மதகிற்கு அருகே உள்ள பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தினசரி குறிப்பிட்ட இந்த பாலத்தின் வழியாக பள்ளி வாகனங்கள், அவசர உறுதிகள், நெல் அறுவடை இயந்திர வாகனங்கள், விவசாயிகள் தங்கள் பயிரிட்டு இருக்கும் செங்கரும்பு, நெல் பயிர்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்கள் முதலிய வாகனங்கள் கடந்து செல்கின்றன, இந்நிலையில் பாலும் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் வலு இழந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.இந்த நிலையை மாற்ற பழைய பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு மீண்டும் மூன்று அடி சேர்த்து அகலமாக புதிய பலத்தை அமைத்து தரும்படி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!