தமிழகம்

ராஜபாளையம் அருகே மதுராபுரி கம்மாபட்டி வழியாக பேருந்து இயக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

49views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலராஜ குலராமன் ஊராட்சிக்கு உட்பட்டது மதுராபுரிகம்மாபட்டி. இக் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 50 மாணவ, மாணவிகள் சத்திரப்பட்டி மற்றும் கீழராஜ குலராமன் அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
ஆனால் இது வரை இந்த கிராமம் வழியாக அரசுப் பேருந்தோ அல்லது தனியார் பேருந்து வசதியோ இதுவரை செய்து தரப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினர். எனவே அம்மன் கோயில் பட்டி மற்றும் மதுராபுரி கம்மாபட்டி வழியாக பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று காலை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!