செய்திகள்

தமிழகம்

சிலைகளுடன் திடீர் போராட்டம் எதிரொலி – தனியார் வாகனங்களில் போலீஸார் சோதனை

வாலாஜா சாலையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகளுடன் சிலர் திடீர் போராட்டம் நடத்தியதால், சென்னை முழுவதும் தனியார் வாகனங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். கரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக, இந்துமுன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம், சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு சிலை தயாரிப்பாளர்கள் விநாயகர் சிலைகளுடன் போராட்டம்...
உலகம்

தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே ‘விடியோ கேம்ஸ்’ விளையாட அனுமதி – சீன அரசு அறிவிப்பு

சீனாவில் 18 வயதிற்கு குறைவானவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே 'விடியோ கேம்ஸ்' விளையாட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சியில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த 'வீடியோ கேம்ஸ்'கள் ஸ்மார்ட் போன் வருகைக்கு பின் அனைவரின் கைகளுக்கும் வரத்தொடங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது இந்நிலையில் விடியோ கேம்ஸ்களை உருவாக்கும் பல நிறுவனங்கள் சீனாவில் இருந்தாலும் சிறார்களுக்கு சில தடைகளை அந்நாட்டு அரசாங்கம்...
உலகம்

3 தீா்மானங்களின் நீட்டிப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

இந்தியா தலைமையில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 3 தீா்மானங்களை நீட்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. கடல்சாா் பாதுகாப்பு, அமைதிப்படை, பயங்கரவாத எதிா்ப்பு ஆகிய தலைப்புகளில் முக்கியக் கூட்டங்களை இந்தியா நடத்தியது. இந்தியா தலைமையிலான கடைசி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தலைமை வகித்தாா். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக அக்கூட்டத்தில்...
இந்தியா

ஜம்மு – காஷ்மீரில் ஆட்சி அமைப்போம்: என்சிபி தலைவர் ஃபரூக் அப்துல்லா உறுதி

காஷ்மீரில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மாநாடு கட்சியின் (என்சிபி) தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது: காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அவர்களை தீவிரவாதிகள் குறி வைக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காஷ்மீர் துணைநிலை...
இந்தியா

தெலங்கானாவில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

தெலங்கானாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத்தில் மணமக்கள் நவாஸ் ரெட்டி - பிரவல்லிகா ஆகியோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவர்கள் காரில் ஹைதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் மேலும் 4 பேர் காரில் இருந்தனர். வழியில் இந்த கார் வெள்ளத்தில் சிக்கியதில் அனைவரும் நீரில் மூழ்கினர். இதில் பிரவல்லிகா மட்டும் பிறகு சடலமாக...
தமிழகம்

செப்டம்பர் இறுதிக்குள் காவிரியில் 64.62 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

காவிரியில் கடந்த 3 மாதங்களாக தரப்படாமல் உள்ள நிலுவை நீர் மற்றும் செப்டம்பர் மாதத்தின் பங்கு உள்பட 64.62 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 7 டிஎம்சி தண்ணீரை ஏற்க தமிழகம் மறுத்துவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!

தமிழகத்தில் இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நடப்பாட்டிற்கான வகுப்புகள் நேரடியாக...
உலகம்

பரவி வரும் கொரோனா.. கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு.. பிரபல நாட்டில் பொது முடக்கம் நீட்டிப்பு..!!

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. அவ்வாறு வேகமாக பரவி வரும்...
உலகம்

அதிபர் ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் தலீபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.‌ இதனால் ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா தான் காரணம் என மேற்கத்திய நாடுகள் பலவும் அமெரிக்கா மீது அதிருப்தி தெரிவித்தன. அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் அதிபர் ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நெருக்கடியை கையாளும் ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது என டிரம்ப்...
இந்தியா

திருமண மண்டபங்களை குத்தகைக்கு விட ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் முடிவு

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் 299 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 177 திருமண மண்டபங்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளன. ஆனால், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமண மண்டபங்கள் கட்டினாலும் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், இதுகுறித்து தேவஸ்தானம் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது. இவர்கள் கொடுத்த அறிக்கை தேவஸ்தான அதிகாரிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சில திருமண மண்டபங்களில் அவ்வூர் மக்கள் மாடுகளை கட்டி அவைகளை...
1 489 490 491 492 493 584
Page 491 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!