தமிழகம்

தமிழகம்

‘வேதா நிலையம்’ தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு

வேதா நிலையம் இல்லம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பைஉயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. ஜெயலலிதா வசித்த போயஸ்தோட்டம் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதைகையகப்படுத்தியும், அரசுடமையாக்கியும் கடந்த அதிமுக அரசுஉத்தரவிட்டது. வேதா நிலையம் இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையும் நீதிமன்றத்தில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான ஜெ.தீபா,ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்றும், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்தும்கடந்த நவ.24-ல் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பிலும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள்...
தமிழகம்

திடக்கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வு வழங்கினால் ரூ.5 லட்சம் பரிசு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

திடக்கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வுகளை வழங்குவோருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் தினமும் சுமார் 5 ஆயிரத்து 100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளை வீடு வீடாக வரும் தூய்மைப் பணியாளரிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து மட்டுமே வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைகளை சாலையில் வீசி எறிவோர், தீயிட்டு கொளுத்துவோர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இருப்பினும் குப்பைகளை வகை பிரித்து பெறுவதிலும், வீடு வீடாக குப்பைகளை சேகரிப்பதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையை தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்கு புதுமையான தீர்வுகளை வழங்குவோருக்கு தூய்மை...
தமிழகம்

ஒரே நாளில் 55 மீனவர்கள் கைது! இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர் . நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை , வழிமறித்த இலங்கை கடற்படையினர் , எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 43 மீனவர்களுடன் , 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர் . அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தினர் . அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. கைதுக்கு மீனவ சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர் அவர்களை...
தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு: சிறப்பு பேருந்துகள் குறித்து இன்று அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு விரைவு, சொகுசுபேருந்துகளில் இதுவரை 10 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 ஜன.14-ம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். 30 நாட்களுக்கு முன்பு அரசுவிரைவு பேருந்துகளில் டிக்கெட்முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தற்போது ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுபற்றி கேட்டபோது போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதிஇருப்பதால், பொங்கலுக்கு முன்கூட்டியே செல்ல விரும்புவோர்தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு, சொகுசு பேருந்துகளில் இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 10 ஆயிரம் டிக்கெட்கள்பதிவு செய்யப்பட்டுள்ளன. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் 20-ம்...
தமிழகம்

கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு எஸ் வகை திரிபு கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பிறப்பு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இதனால், பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, வருகிற 31-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை பொதுமக்களுக்கு...
தமிழகம்

விரைவில் வெளியாகிறது தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தகவல்

தமிழகத்துக்கான மாநில கல்விக்கொள்கை விரைவில் வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 1,000 பழங்குடி மர இனங்களின் கன்றுகளை நடும் விழா நேற்று நடைபெற்றது. கிண்டி ரோட்டரி கிளப் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார். அப்போது மாணவர்களிடையே அவர் பேசியதாவது: மாநிலக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என நான் ஏங்கியது உண்டு. இந்திய அளவில் சிறப்புமிக்க கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் பலரும் ஆர்வமாக உள்ளனர். கல்வியைத் தாண்டி விளையாட்டு, சமூகப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். கல்லூரியில் தற்போது 1,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. ஆனால், இங்குப் படிக்கும் 5 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொருவரும்...
தமிழகம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி மீது நடவடிக்கை: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று சூழலில் 10,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படுகிறது. தேர்வெழுதும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலனைகருத்தில்கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்நிலையில், டிச.16 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளதேர்வுகளின்போது கூடுதல் நடைமுறைகளைப் பின்பற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தேர்வு நாளில் காலை 10.45 மணிக்கு பாஸ்வேர்டு அனுப்பப்படும். காலக்கெடு நேரமான 10.45மணிக்குள் அனைத்து மாணவர்களும் தேர்வு...
Uncategorizedதமிழகம்

திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் அதிமுக நிர்வாகிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவி வழங்க வேண்டும், பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம், பொங்கல் பரிசுத்தொகைஅறிவிக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அதிமுகஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாக ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. சென்னையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராயபுரம், வள்ளுவர் கோட்டம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
தமிழகம்

காணிக்கை நகைகளை உருக்க விதித்த தடை உத்தரவு மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிப்பு

  கோவில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்ற உத்தரவை, மேலும் ஆறு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்பாக, அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்த நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் டிபாசிட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நகைகளை பாதுகாக்கும்படி, அறங்காவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தலாம். நகைகளை உருக்கும்படி உத்தரவிட முடியாது.தமிழகத்தில், ஏராளமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஊழியர்கள், தக்காராக பணியாற்றுகின்றனர். அவர்களால் கொள்கை முடிவு எடுக்க முடியாது. எனவே, அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். நகைகளை உருக்குவதற்கு...
தமிழகம்

ரூ.14.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்: முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் 'கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்' அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 5.38 லட்சம் சதுரஅடி பரப்பளவில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம், பேருந்து நிறுத்தம், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் இந்த பணிகள் நடைபெற்று வந்தன. கரோனா பாதிப்பு காரணமாக இந்த பணிகள் முடங்கின. அதன்பிறகு இந்த பணிகள் தொடங்கி நடைபெற்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதியன்று இந்த இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க...
1 508 509 510 511 512 563
Page 510 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!