‘வேதா நிலையம்’ தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு
வேதா நிலையம் இல்லம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பைஉயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. ஜெயலலிதா வசித்த போயஸ்தோட்டம் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதைகையகப்படுத்தியும், அரசுடமையாக்கியும் கடந்த அதிமுக அரசுஉத்தரவிட்டது. வேதா நிலையம் இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையும் நீதிமன்றத்தில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான ஜெ.தீபா,ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்றும், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்தும்கடந்த நவ.24-ல் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பிலும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள்...
