சமூக வலைதளங்களில் செய்தி பரவியதால் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக அனுரத்னா மீண்டும் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் விசாரணை நடத்தி நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக (பொறுப்பு) கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர் அனுரத்னா. இவர், தலைமை மருத்துவர்பொறுப்புக்கு வந்த பிறகு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதனால், பொன்னேரி சுற்று வட்டார மக்களின் அன்பை பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்,நவீன மருத்துவ உபகரணங்களை கையாள்வது தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்த பயிற்சி காலங்களில், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை (பொறுப்பு) மருத்துவராக விஜய் ஆனந்த் நியமிக்கப்பட்டார். மருத்துவர் அனுரத்னா பயிற்சிமுடிந்து கடந்த 13-ம் தேதி மீண்டும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். ஆனால், அவர் ஏற்கெனவே இருந்த பதவியை தொடர விடாமல், அவரை விட பணியில் 5 ஆண்டுகள் ஜூனியரான விஜய் ஆனந்த் அப்பணியை தொடர்ந்து...
