தமிழகம்

தமிழகம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையானது அதன் முழுக்கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது. எனவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று (08.11.2021) மாலை 6.00 மணிக்கு திறந்துவிடப்படுகிறது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவிரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள்...
தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது, முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் முன்புறமுள்ள கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்கிறார். நாளை மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம் கோயிலில் நடக்கிறது. இரவில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.  ...
தமிழகம்

“திடீர் மழைப்பொழிவுக்கு இதுதான் மிக முக்கியமான காரணம்” – நவ.6 மழை குறித்து ரமணன் விளக்கம்

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாகவே அதீத மழை பொழிவு இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டுமே ஒரே இரவில் சுமார் 20 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் 2015-இல் சென்னையில் பொழிந்த மழை, 2018-இல் கேரளாவில் பதிவான மழை, உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த மழை என வழக்கத்திற்கு மாறாக மழை பொழிவு கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதற்கான தீர்வு தான் என்ன என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இதற்கான விளக்கத்தை இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'நேர்படப் பேசு' நிகழ்ச்சியில் 'தொடரும் பெருமழை.. வடியாத தண்ணீர்.. எங்கே தவறு? என்ன தீர்வு?'...
தமிழகம்

கனமழையால் பொதுமக்கள் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்: தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: தொடர் மழையால் தாழ்வான சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து செல்வதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து, உணவு, மருந்து வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று, உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: 2015-க்குப் பிறகு 200 மில்லிமீட்டருக்கும் அதிகமழை...
தமிழகம்

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. முழு பின்னணி!

தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மழை தீவிரம் எடுத்து உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் பிரேக் எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் தமிழ்நாடு நோக்கி நகர உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 2015க்கு...
தமிழகம்

தொடர் கனமழை; திறக்கப்படும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்பட உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் கனமழையால் நிரம்பி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் ஏரியின் நீர் மட்டம் 21 புள்ளி 20 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 19 புள்ளி 30 அடியாக உள்ளது. காலை நிலவரப்படி ஏரிக்கு சுமார் ஆயிரத்து 400 கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், காலை 11 மணியளவில் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளது. விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படும் என்றும், ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் வெளியேற்றம்...
தமிழகம்

விடிய விடிய மழை.. சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. தியாகராய நகர் துரைசாமி சுரங்கப்பாதை உட்பட...
தமிழகம்

நிதித்துறை செயலாளர் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நிதித்துறை முருகானந்தம்; தொழில்துறை கிருஷ்ணன்; பொதுப்பணித்துறை கட்டாரியா; ஊரக வளர்ச்சித்துறை அமுதா நியமனம்

நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட 10 முக்கிய துறைகளின் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசு பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு துறைகளுக்கும் நேர்மையான, திறமையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். அதிகாரிகள் நியமனம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் அதிமுக ஆட்சியில் நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டும் மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன், தொழில் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அந்த துறையின் செயலாளராக இருந்த முருகானந்தம், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக இருந்த அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்...
தமிழகம்

மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பு ஏற்படுத்த திட்டம்: சுற்றுலாத் துறை

மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் வகையில் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உட்படபல்வேறு சிற்பங்கள் மற்றும் கலைச்சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை தொல்லியல் துறைபாதுகாத்து பராமரித்து வருகிறது. மேலும், உலக பாரம்பரிய கலைச்சின்னம் என யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கலைச்சின்னங்களை கண்டு ரசிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கரோனா தொற்று பரவலால்சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால்,...
தமிழகம்

138 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட 138 டன் பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி நேற்று அகற்றியது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக சுமார் 5,100 டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. அவற்றை அகற்ற 358 கனரக மற்றும் இலகுரக காம்பாக்டர் மற்றும் டிப்பர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் 3 ஆயிரத்து 725 பேட்டரி மூலம் இயங்கும் 3 சக்கர வாகனங்களும் அன்றாட தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரமாகும் பட்டாசு குப்பை தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று பகல் 12 மணி வரை 138 டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தபட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பட்டாசு...
1 509 510 511 512 513 556
Page 511 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!