அவசரச் சட்டம் : தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்!!
தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது . சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் கே . என் . நேரு , தாம்பரம் , பல்லாவரம் , செம்பாக்கம் , பம்மல் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள் , ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி அமைக்கப்படும் என்று அறிவித்தார் . அந்த அறிவிப்பின் அடிப்படையில் , புதிய மாநகராட்சி குறித்த அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டது . அதன்படி , புதிய மாநகராட்சியில் தாம்பரத்துடன் பல்லாவரம் , பம்மல் , செம்பாக்கம் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம் , மாடம்பாக்கம் , பெருங்களத்தூர் , பீர்க்கன்காரணை , திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைக்கவும் ,...
