தமிழகம்

தமிழகம்

இங்கிலாந்தில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக நாளை தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்: சீமான்

இங்கிலாந்து வருகை தந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக தமிழர்கள் நாளை ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். வருகிற 01.11.2021 திங்கட்கிழமை அன்று, பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தில் நடக்கவிருக்கிற சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோத்தபய ராஜபக்சே வருகிறார்கள் என்ற செய்தி நாம் எல்லோரும் அறிந்ததுதான். இன்றைக்கு இலங்கை நாட்டினுடைய அதிபராக இருக்கின்ற அவர், நம் இனத்தை அழித்தொழிக்கிற இறுதிக்கட்ட போரின்போது பாதுகாப்புத்துறை, இராணுவ அமைச்சராக இருந்தார் என்பதும் நாம் அறிந்ததுதான். திட்டமிட்டு நம் இனத்தைப் படுகொலை செய்த சிங்களவர்களில், குறிப்பாக மகிந்தா ராஜபக்சே, கோத்தபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும்பங்காற்றினர். உலகில் பல்வேறு நாடுகளின் ஆதரவையும், துணையையும் பெற்றுக்கொண்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் நடக்கும்...
தமிழகம்

பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல.. தமிழ்நாடு நாள் விவகாரத்தில் ராமதாஸ் கருத்து

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18ஆம் நாள் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு நாள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவு கூறும் நாள் தானே தவிர, தமிழ்நாடு நாள் அல்ல; மாறாக 1967-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18 ஆம் நாள் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு நாள் என்றைக்கு கொண்டாட்டப்பட வேண்டும் என்பது குறித்து...
தமிழகம்

சரவெடிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை

சரவெடிகளை உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீட்டிக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும் என கருத்துக் கூறிய உச்சநீதிமன்றம், உத்தரவு கட்டாயம் கடைபிடிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் 2017, 2018 ஆம் ஆண்டு உத்தவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், வழங்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அதாவது காலை 6-7, இரவு 7-8 மணி வரையிலும் வெடித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து, கூடுதல் கால அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பேரியம் உப்புகள் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கவும் தடை, சரவெடி தயாரிக்க மற்றும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி, தயாரிப்பு...
தமிழகம்

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக தமிழ்நாட்டின்7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து இரண்டு நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும். இதன் காரணமாக இன்று தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, விருதுநகர் ,சிவகங்கை, கடலூர் ,திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் , புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம்...
தமிழகம்

எப்படி இருக்கிறார் ரஜினி? ஒய்.ஜி. மகேந்திரன் விளக்கம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கோலோச்சி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு ரஜினிகாந்த்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை காரணமாக ஆண்டுதோறும் அமெரிக்கா சென்று ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். சமீபத்தில் டெல்லியில் 67ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனால் டெல்லி சென்றிருந்த அவர் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இந்த சூழலில் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி பரவ தொடங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து விளக்கமளித்த லதா ரஜினிகாந்த், 'ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து...
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக நவ.1-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ல் வெளியிடப்படும் என கோவையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை வகித்து பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் 1-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில்...
தமிழகம்

ஓபிஎஸ் அல்லது சசிகலாவின் தலைமையின்கீழ் அதிமுக வராவிட்டால் அழிவை சந்திக்க நேரிடும்: நீதிமன்றத்தில் ஆஜரான வா.புகழேந்தி ஆதங்கம்

ஓபிஎஸ் அல்லது சசிகலாவின் தலைமையின்கீழ் அதிமுக வராவிட்டால், அக்கட்சி அழிவை சந்திக்கநேரிடும் என நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வா.புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக பதவிவகித்த பெங்களூரு வா.புகழேந்தி, கடந்த ஜூன்மாதம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணம், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி இருவருக்கும் எதிராக குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வா.புகழேந்தி சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகிய இருவருக்கும் விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.அலிசியாமுன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது...
தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்ற செளந்தர்யா ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் 'ஹூட்' செயலியை நடிகர் ரஜினி கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தினார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போல இந்த ஹூட் செயலி பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் அப்போது தெரிவித்தார். ஹூட் ஆப் அறிமுக விழாவில் பேசிய செளந்தர்யா, கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவித்தார். அதோடு குறுஞ்செய்திகளில் நாம் பயன்படுத்தும் எழுத்துகளுக்கு உணர்வுகள் இல்லை எனவும், ஆனால் ஒருவரின் குரலுக்கு உணர்வுகளை தரும் வலிமை இருப்பதாகவும் குறிப்பிட்டார்....
தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பகலில் சரக்கு வாகனங்கள் வர தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சரக்கு வாகனங்கள் பகலில் வர அனுமதி இல்லை என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை சார்பில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பேருந்து நிலையத்துக்கு நவ.1 முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 3 ஆயிரம் அரசுப் பேருந்துகள், 800 தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் காரணமாக அதிக அளவில் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களை பகல் நேரத்தில் அனுமதிக்க இயலாது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும்படி, தங்களின் முகவர்களுக்கு வியாபாரிகள் தெரிவிக்க வேண்டும். சரக்குகளை...
தமிழகம்

சிசிடிவி கேமராக்களை அகற்றியது ஏன்..?: சுப்ரீம் கோர்ட்டில் அப்போலோ விளக்கம்..!

முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்குக்கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை தரப்பில், 'ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறாததால், மருத்துவ ரீதியிலான விவரங்களை எப்படி தெரிவிக்க முடியும். அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைபட்சமானது. எங்கள் நற்பெயர் சார்ந்த விஷயம் என்பதால் அதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமையுண்டு. எங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் கூறுகிறோம். ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அங்கு ஆஜராக மாட்டோம். மேலும், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனியுரிமைக்காக அப்போதைய...
1 500 501 502 503 504 544
Page 502 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!