தமிழகம்

தமிழகம்

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த, சுமார் 8 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கெனவே, விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால், நெல்மூட்டைகள் மழையில் நனைந்து,விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கத் தவறிய அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது. தற்போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி, பாதிப்புகளை மதிப்பிட்டு, உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மத்திய அரசு புயல் நிவாரணம் வழங்கவில்லை என்று காரணம் கூறாமல், முழுமையாக சேதமடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.40,000, மறு சாகுபடி செலவுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும். மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்த விவசாயிகளுக்கு,...
தமிழகம்

மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி இல்லை: அமைச்சர் தகவல்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: 2018 முதல் மின் இணைப்பு பெற விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. மின்சார கட்டணத்துக்கு ஜிஎஸ்டி என்பது கிடையாது. தற்போதுள்ள ஆட்சியில் புதிதாக மின் துறையில் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. கடந்த ஆட்சியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது கூட அவர்களுக்கு தெரியவில்லை. விவசாய இலவச இணைப்புக்கு கடந்த ஆட்சியிலேலே மீட்டர் பொருத்தப்பட்டது என்றார்....
தமிழகம்

தமிழகத்தில் 59 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு: புத்தாண்டு நாளில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

2008-ம் ஆண்டு நேரடி சப் இன்ஸ்பெக்டராக பணிக்குச் சேர்ந்த 59 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் கடந்த 18.1.2008 அன்று 700 பேர் நேரடி சப் இன்ஸ்பெக்டர்களாக பணி அமர்த்தப்பட்டனர். அவர்களில், 170 பேருக்கு ஏற்கெனவே இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. 10 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 14 ஆண்டுகளாகியும் வழங்கப்படாததைக் கண்டித்து, அவர்கள் பணிக்கு சேர்ந்து 15 -வது ஆண்டு தொடக்க நாளான ஜன.18-ம் தேதி சீருடையில் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிய தயாராகி வருவதாக 2008 'பேட்ஜ்' சப் இன்ஸ்பெக்டர்களிடையே ரகசியமாக தகவல்கள் பகிரப்பட்டன. இதுகுறித்து கடந்த டிச.28-ம் தேதி 'இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது. அதில் 2 ஆண்டுகளாக...
தமிழகம்

சென்னையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதன் நீட்சியாக, மறுஉத்தரவு வரும் வரை சென்னையில் கடற்கரை மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டது. இந்தக் கட்டுப்பாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்தது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மட்டும் பிரத்யேக நடைபாதையில் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,489 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

மத்திய அரசின் புதிய திட்டத்தால் டிஜிட்டல் மயமாகிறது மின்வாரியம்

மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்கள் முதல் வீடுகள் வரை, 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்துவதன் வாயிலாக, மின் வாரியம் 'டிஜிட்டல்'மயமாக உள்ளது.மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், 12 சதவீதம் என்றளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.வினியோக பெட்டிகள்இத்திட்டத்திற்காக, 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, மாநில மின் வாரியங்களுக்கு கடனாக வழங்கப்பட உள்ளது.குறிப்பிட்ட காலத்திற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால் கடனில் 60 சதவீதம் மானியமாகி விடும்; அந்த தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை. தமிழக மின் வாரியம்,இத்திட்டத்தின் கீழ் அனைத்து துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்த...
தமிழகம்

ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள்

ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் இன்றும், நாளையும் நடக்கின்றன. கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஈஷா அறக்கட்டளை சார்பில், இன்றும்(2-ம் தேதி), நாளையும் (3-ம் தேதி)தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடக்கின்றன. ஈஷா தன்னார்வலர்கள் மூலம் நடக்கும் இவ்வகுப்பில் 'சூர்யசக்தி' என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சூர்ய சக்தி பயிற்சி குறித்து சத்குரு கூறும்போது, 'உங்களுக்குள் உள்ள சூரியனை நீங்கள் தூண்டினால், உங்கள் உடல் ஒளி வீசி பிரகாசிக்க தொடங்கும்' என்றார். காலை 6.30 மணி முதல் 8.15 மணி வரை, நண்பகல் 11.30 மணி முதல் 1.15...
தமிழகம்

ஜன. 12ல் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1 ஆம் தேதி (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக சார்பில் மதுரையில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் பொங்கல் பண்டிகை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்த மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  ...
தமிழகம்

தமிழகம்,புதுவையில் இயல்பை விட 59% அதிக மழை!

தமிழகம்,புதுவையில் இயல்பை விட 59% அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகம்,புதுவையில் இயல்பை விட 59% அதிக மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை பெய்ய வேண்டிய மழை அளவு 45 செ.மீ. என கணித்திருந்த நிலையில்,பெய்த மழை அளவு 71 செ.மீ. அதாவது இயல்பை விட 59% அதிக மழை ஆக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக,விழுப்புரம் மாவட்டத்தில் 119 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால்,அங்கு பெய்ய வேண்டிய மழை அளவு 55 செ.மீ. மட்டுமே,ஆனால் பெய்த மழை அளவு 121 செ.மீ. என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக,சென்னையைப் பொறுத்தவரை பெய்ய வேண்டிய மழை அளவு 78 செ.மீ மட்டுமே, ஆனால்,பெய்த...
தமிழகம்

புத்தாண்டையொட்டி சென்னையில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு..!

சென்னையில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி1 அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை புத்தாண்டையொட்டி ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி1 அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும்...
தமிழகம்

நீலகிரியில் புல்வெளிகளை மூடியது உறைபனி: அதிகாலை வெப்பநிலை 2 டிகிரியாக பதிவு

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி, மார்ச்முதல் வாரம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக உறைபனிப் பொழிவு தள்ளிப்போனது. நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உறைபனிப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் உறைபனிப் பொழிவு மேலும் தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவானது. தலைகுந்தா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, கேத்தி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை குறைந்தது. நேற்று அதிகாலை உதகை தாவரவியல் பூங்காமற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்பநிலை 2 டிகிரி செல்சியஸாக பதிவானது. உதகை குதிரை பந்தய மைதானம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல்...
1 487 488 489 490 491 545
Page 489 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!