தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கம் – தொமுச அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று காலை முதல் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொமுச தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும்,இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தன.அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன.இதன்காரணமாக, தமிழகத்தில் நேற்று காலை 11 மணி நிலவரப்படி 68% பேருந்துகள் ஓடவில்லை என்றும் 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது.இதனால்,மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என பொதுமக்கள் பலர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த...
தமிழகம்

சென்னையில் தனியார் பள்ளி வளாகத்தில் வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம் – சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு: ஓட்டுநர், உதவியாளர் கைது; பள்ளி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பின்னோக்கி வந்த பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 7 வயது மாணவன்உயிரிழந்தான். இந்த விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர், பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.   நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளான். வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் சென்றவன், தான் மறந்து வைத்துவிட்டு வந்த சாப்பாட்டுப் பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி வந்துள்ளான். அப்போது ஓட்டுநர்...
தமிழகம்

”சசிகலாவுக்கு கௌரவமான பதவி! ஆனா, முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு தான் இருக்கணும்” – எடப்பாடி பழனிச்சாமி

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் தற்போது மாற்றம் தெரிகிறது என்கிறது அக்கட்சி வட்டாரம் . சென்னையிலிருந்து சேலத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி தனக்கு நெருக்கமான சிலருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த ஆலோசனையில் ஆத்தூர் இளங்கோவனும் பங்கேற்றிருக்கிறார். எடப்பாடிக்கு மிக நெருக்கமான ஆத்தூர் இளங்கோவன் சமீபத்தில் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. நடராஜன் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா தஞ்சாவூர் சென்றிருந்தபோது கூட அவருடன் செல்போனில் பேசியதாகவும் கட்சி வட்டாரத்தில் தகவல் இருந்தது. இந்த நிலையில் ஆதரவாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா அதிமுகவிற்கு வந்தாலும்கூட அவருக்கு முழுமையான அதிகாரம் இருக்கக் கூடாது. ஒரு கௌரவமான பதவி வேண்டுமானால் இருக்கலாம். இப்போது இருக்கும் இந்த செட்டப்பிலேயே தொடரவேண்டும். முடிவெடுக்கும் அதிகாரம் எல்லாம் நமக்கு தான் இருக்க...
தமிழகம்

நம்மை பிளவுபடுத்தும் சக்திகளை உதறித் தள்ளுங்கள்: துபாய் தமிழர்களிடையே முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

துபாய் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நம்மை பிளவுபடுத்தும் சக்திகளை உதறித் தள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வளம், அறிவு, தொழில் நுட்பங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள்பயணமாக கடந்த 24-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார். துபாயில் நடந்துவரும் சர்வதேச கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை முதல்வர் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து அமீரக அமைச்சர்களையும் தொழில் துறையினரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்நிலையில், திமுக அயலக அணி சார்பில் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ,...
தமிழகம்

மத்திய அரசு ரூ.16 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவை என்று உண்மைக்கு மாறாக தமிழக அரசு கூறியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

மத்திய அரசு ரூ.6,500 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை முழுமையாக கொடுத்ததை கூறாமல் ரூ.16 ஆயிரம் கோடி நிலுவை என உண்மைக்கு மாறாக தமிழக அரசு உயர்த்தி கூறி வந்தது ஏன்என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பட்ஜெட்டை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். அதில் 84 சதவீதம் ஆசிரியர்களுக்கு சம்பளமாக செல்கிறது. எஞ்சியுள்ள 16 சதவீதத்தில் சீருடை, புத்தகம் உள்ளிட்டவற்றுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இவை தவிர, அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. 'இல்லம் தேடி கல்வி' திட்டத்துக்கான தொகையை மத்திய அரசுதான் கொடுக்கிறது. மத்திய அரசின்திறன்...
தமிழகம்

துபாய் எக்ஸ்போ; தமிழ்நாடு அரங்கு- முதலமைச்சர் திறப்பு

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு துபாயில், எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியின் கடைசி வாரம், தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி. எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த அரங்கில் தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் சிலைகள், வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாகக் கண்காட்சி அமைந்துள்ளதாகவும், அதுதொடர்பான புரிதலைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான...
தமிழகம்

துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது . 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. கண்காட்சியில் "தமிழ்நாடு அரங்கு" உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் இன்று முதல், மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றடைந்தார். துபாய் சென்ற அவரை துபாய்க்கான இந்திய தூதர் அமன் புரி மற்றும்...
தமிழகம்

வலைதள தகவலை நம்ப வேண்டாம் விரைவில் குரூப்-4 தேர்வு அறிவிக்கை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம்வெளியிடப்பட்டு, ஜூன் மாதம்போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 5,255 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த 23-ம் தேதி இரவு தகவல் பரவியது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 குறித்ததவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தஅறிவிக்கையை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம். டிஎன்பிஎஸ்சி அறிவிக்கைகள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்த்து அறிந்து கொள்ளுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது....
தமிழகம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. அத்துடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வரும் இலங்கை கடற்படை , அவற்றை திருப்பி அளிக்காமல் நாட்டுடைமையாக்கி கொள்கிறது. அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில் ,சில மாத கால இடைவெளிக்கு பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர். இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரமும், உடல் நிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அத்துடன் அவர்களின் 2 படகுகளையும் சிறை பிடித்து சென்றனர். இதனிடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான நாகை , காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
தமிழகம்

சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் இன்று துபாய் பயணம்: முதலீட்டாளர்களையும் சந்திக்கிறார்

துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் துபாய் செல்கிறார். தமிழகத்தை தொழில்துறையில் முதலிடத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசுதீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்குஆதாரமாக முதலீடுகளை அதிகஅளவில் ஈர்க்க, தமிழகத்தின்உட்கட்டமைப்பு வசதிகளைஅதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி அதற்கான இணையதள வசதியும் ஏற்படுத் தப்பட்டுள்ளது. இந்நிலையில், 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார். இதில், தமிழக அரசு சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் பெருந்தொழில்கள் பற்றியஅரங்கம் அமைக்கப்பட உள்ளது.இந்த அரங்கத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்கமுதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும்நோக்கில், முதல்வர்...
1 472 473 474 475 476 545
Page 474 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!