தமிழகம்

தமிழகம்

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்தார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகப் புகாருக்கு உள்ளான அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்ததுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், வேணுகோபால கெளடா, சித்தாா்த் பட்னாகா் மற்றும் மற்றொரு மனுதாரரான ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோா் ஆஜராகினா். எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ராகேஷ் துவிவேதி, முகுல் ரோத்தகி,...
தமிழகம்

9 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக, உருவாகியுள்ள வளி மண்டல் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருக்குவளை பகுதியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. கீழச் செருவை, கோவில்பட்டி 110 மிமீ, அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு 90மிமீ, பெலாந்துறை, சொலையாறு 80மிமீ, தேவக்கோட்டை, ஏற்காடு 70மிமீ மழை பெய்துள்ளது. மாமல்லபுரம் 30 மிமீ, ஊத்துக்கோட்டை, பூண்டி,கேளம்பாக்கம்...
தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில், தென் மாநிலங்களில் நிலவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11:40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில், திருவனந்தபுரம் செல்கிறார். மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார். சந்திப்பின்போது, முல்லைப் பெரியாறு அணை, பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி விவகாரம், நெய்யாறு பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.மேலும், ஏற்கனவே நீர்வளத்துறை செயலர்கள் நடத்திய பேச்சுகள், அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த குழுக்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்க உள்ளது. மாலை கேரள அரசு சார்பில் நடக்கும் கலை, இசை நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின்...
தமிழகம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஜெயலலிதா மரணம் இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதன்பின்னர் பல அரசியல் அதிரடிகள் தமிழக அரசியலில் அரங்கேறிய நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டு வர விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். ஆறுமுகசாமி ஆணையம் இதைத்தொடர்ந்துஅப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை...
தமிழகம்

அமுதை பொழியும் நிலவே… ‘பி சுசீலா 70’ – சென்னையில் கொண்டாட்டம்

பிரபல பின்னணி பாடகி பி சுசீலாவின் 70 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்வை தினமலர் நாளிதழ் இணைந்து வழங்கியது. விழாவில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல் ஆதி மூலம், பழம்பெரும் நடிகைகள் பாரதி, சச்சு, கே ஆர் விஜயா, காஞ்சனா, வெண்ணிறாடை நிர்மலா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னணிப் பாடகர்கள் சித்ரா, எஸ்பிபி சரண், உன்னி மேனன், ஸ்வேதா மோகன், முகேஷ், அனந்தூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பி சுசீலா அவர்களின் பாடல்களை பாடி மகிழ்வித்தனர்.விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து பி சுசீலாவிற்கு இசை அரசி பட்ட வழங்கி கவிதை ஒன்றையும் வாசித்தார். நடிகை கே ஆர் விஜயா, சுசீலாவிற்கு கிரீடம் சூட்டி...
தமிழகம்

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். பாரதிராஜா இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், திருசிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பாரதிராஜா இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தமிழகம்

திருவல்லிக்கேணியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து சாலையோர குடியிருப்போர் மறியல் போராட்டம்

திருவல்லிக்கேணியில் சாலையோரங்களில் தங்கியிருப்போர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை, முப்தி அமிருல்லா சாலையோரத்தில் 52 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அதிகாரிகளுக்கும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை...
தமிழகம்

நுங்கம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், நுங்கம்பாக்கம் பகுதியில் சுரங்க கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்3 வழித்தடங்களில் 118.9 கி.மீ.தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் சுரங்கம், உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது சுமார் 42 இடங்களில் பணிகள் நடக்கின்றன. இந்த 3 வழித்தடங்களில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ.) முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் 19.1 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டத்திலும், 26.7 கி.மீ. தொலைவுக்கும் சுரங்கத்திலும் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் சுரங்க கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள்தொடங்கியுள்ளன. ஸ்டெர்லிங் சாலை - கல்லூரி சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிக்காக, தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய 2 இடங்களில் சுரங்க...
தமிழகம்

அதிமுக பொதுக்குழு : ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என்கிற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து , ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாத நிலை ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழு வழக்கில்...
தமிழகம்

தமிழகத்தில் குரங்கும்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேலுார், சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.99 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 89.5 சதவீதம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மேலும், 3 கோடியே 50 லட்சம் பேருக்கு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. தமிழகத்தில், 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. தொடர்ந்து பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர். சுகாதார துறையில் காலியாக உள்ள மருத்துவர், நர்ஸ், டெக்னீசியன்கள் உட்பட, 4,308 காலி...
1 462 463 464 465 466 545
Page 464 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!