உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்
உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்தார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகப் புகாருக்கு உள்ளான அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்ததுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், வேணுகோபால கெளடா, சித்தாா்த் பட்னாகா் மற்றும் மற்றொரு மனுதாரரான ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோா் ஆஜராகினா். எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ராகேஷ் துவிவேதி, முகுல் ரோத்தகி,...
