தமிழகம்

தமிழகம்

இன்று தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பதவியேற்பு.!!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர் என் ரவி தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆர் என் ரவி 1976 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளர். இதையடுத்து, மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு நாகலாந்து மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தற்போது தமிழகத்தில் 15வது ஆளுநராக ஆர் என் ரவி இன்று பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது. ஆர் என் ரவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி பதவி பிரமாணம்...
தமிழகம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் விசாரணை செப்.24-க்கு தள்ளிவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் விசாரணையை செப்.24-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், வழக்குப்பதிவு செய்வதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர். இதனால் இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதியான எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்து வருகிறது. ராஜேந்திரபாலாஜி தரப்பில், ''உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட...
தமிழகம்

பெரியாரின் 143வது பிறந்தநாள் : இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

இளம் தலைமுறையினரோடு காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை 'சமூக நீதி நாள்' ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடர் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணியளவில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும்....
தமிழகம்

ரூ.1,281 கோடி! நீர் வழி போக்குவரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம்

சென்னையில், நீர் வழி போக்குவரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, கிளை கால்வாய்களை சீரமைக்கவும், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை இணைந்து, 1,281 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.சென்னையில், முக்கிய நீர் வழித்தடங்களாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. குப்பை, கழிவு நீர் கலப்பால், இவை சாக்கடை போல் காட்சியளிக்கின்றன. நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.இதில், கூவம் ஆற்றின் கரையோரத்தில் இருந்த, 12 ஆயிரத்து 400 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது, 1,800 குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.அதன்படி, கூவம் கரையோரத்தில் இருந்த, 80 சதவீத குடியிருப்புகள் அகற்றப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன....
தமிழகம்

தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று முதல் கொண்டாடப்படவுள்ள சமூக நீதி தினத்தை மாற்றவும், அழிக்கவும் முடியாது: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சூளுரை

தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று முதல் கொண்டாடப்பட உள்ள சமூக நீதி தினத்தை எதிர்காலத்தில் மாற்றவும், அழிக்கவும் முடியாது என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி வரவேற்றார். விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, 'திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிக மிக குறைவு என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், 30 நாட்களில் 1,121 பண்ணைக் குட்டைகளை அமைத்து உலக சாதனை...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு, வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! கடந்த சட்டமன்ற தேர்தல் 2021, நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக அமைந்தது. பெரிய பொருளாதார வசதிகள், குடும்பப் பின்புலம் இன்றி, சாதி-மத உணர்வைச் சாகடித்து, நாம் தமிழர் என்று ஒன்றுதிரண்டு நம் தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்காக நேர்மையோடும் நெஞ்சூறுதியோடும் நாம் சிந்திய கடின உழைப்பு ஒருபோதும் வீண்போகாது. “எப்போதும் வெற்றிக்கான அடித்தளம் உழைப்பின் வியர்வையில் இருக்கிறது” என்கிறார் பேரறிஞர் வால்டேர்....
தமிழகம்

செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக அனுசரிப்பு: அரசாணை வெளியீடு

செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக அனுசரிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில், 6ம் தேதி, பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி (நாளை) ஆண்டுதோறும் 'சமூக நீதி நாள்' ஆக கொண்டாடப்படும் என் முதல்வர் அறிவித்தார். அதன்படி, சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறி தள்ளி, பெண்களை சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் நாள் ஆண்டுதோறும் தலைமை செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அரசு அலுவலகங்களிலும் 'சமூக நீதி நாள்' உறுதிமொழியை எடுத்துக் கொள்ளும் விதமாக கீழ்க்ணடவாறு உறுதிமொழியை அனுசரிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்-...
தமிழகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. செப். 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு அக். 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 முதல்மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்படும். மனுக்களை தாக்கல்செய்ய வரும் 22-ம் தேதிகடைசி நாளாகும். மனுக்களை வரும் 25-ம் தேதி வரை திரும்பப் பெறலாம். அன்று...
தமிழகம்

நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவார்: தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நம்பிக்கை

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், அகரமேல் மற்றும் மேல்மணம்பேடு ஆகிய ஊராட்சிகளில், 2017-18-ம் ஆண்டுக்கான, மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் செலவில் 5 உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விளக்குகளை நேற்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுகளை நனவாக்குகிற, மக்களுக்கு அளித்த வாக்குறுதியைநிறைவேற்றக் கூடிய, தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும்...
தமிழகம்

விதைச்சான்று துறையை சென்னைக்கு மாற்ற எதிர்ப்பு : விதைகளுடன் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!!

கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி விதைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் விதைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இம்மனுவில் இச்சான்று வழங்கும் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றினால் கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும், சென்னைக்கு விதைச்சான்று துறையின் தலைமை இடத்தை மாற்றுவதால் விவசாயிகள் அதன் மூலம் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களை நேரிடக் கூடும் என்பதாலும் இந்நடவடிக்கையை கைவிட...
1 462 463 464 465 466 498
Page 464 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!