விருதுநகர் மாவட்டத்தில், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் பார்களை மூடுவதற்கு ஆட்சியர் உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்கள் அனைத்தும், தேவர் ஜெயந்தி நாளில் தற்காலிகமாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 30ம் தேதி (ஞாயிறு கிழமை) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும், தனியார் பார்களும், 29ம் தேதி (சனி கிழமை) மாலை 6 மணியில் இருந்து, 30ம் தேதி (ஞாயிறு கிழமை) முழுவதுமாக கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செய்தியாளர்: வி காளமேகம்...
