தமிழகம்

தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் பார்களை மூடுவதற்கு ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்கள் அனைத்தும், தேவர் ஜெயந்தி நாளில் தற்காலிகமாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 30ம் தேதி (ஞாயிறு கிழமை) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும், தனியார் பார்களும், 29ம் தேதி (சனி கிழமை) மாலை 6 மணியில் இருந்து, 30ம் தேதி (ஞாயிறு கிழமை) முழுவதுமாக கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செய்தியாளர்:  வி காளமேகம்...
தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் குருபூஜையை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பொது மக்களுக்கு சர்க்கரைபொங்கல், புளியோதரை உள்ளிட்ட அன்னதானம் நடைபெற்றது. இதில் முள்ளிப்பள்ளம் அகமுடையார் முன்னேற்ற சங்க தலைவர் கிருஷ்ணன்(எ) கிட்டு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டான் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வண்டிக்காரராசு, செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் முத்துக்குமார் ,ஜேசிபி கண்ணன் ,ஜேசிபி கார்த்தி ,மனோகரன் ரவி ,கீரைண்ணன் மற்றும் அகமுடையார் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள 38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்' எனும் நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார். இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்று பள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது.  'திருக்குறள் அறத்துப்பால் கதைகள்' எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி ஸ்ரீதேவி வெளியிட, கவிஞர் மு.முருகேஷ் பெற்றுக்கொண்டார். விழாவில் கல்வி இயக்குநர் கு.உதயகுமாரி, பள்ளி முதல்வர் மு.ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டனர். “வகுப்பறையில் நடத்தப்படும் பள்ளிப் பாடப்புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது; அதையும் தாண்டி குழந்தைகளிடம் புத்தக வாசிப்புத் திறனை அதிகரிக்க...
தமிழகம்

திருப்பரங்குன்றம் நிலையூரில் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜன்செல்லப்பா MLA. திரைப்பட நடிகர் வையாபுரி கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூரில் அதிமுக பொன்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். மnவட்ட MGR அணி செயலாளர் ரமேஷ் வரவேற்புரை கூறினார். MLA ராஜன் செல்லப்பா,திரைப்பட நடிகர் வையாபுரி சிறப்புரையாற்றினார். அண்ணா பெயரையும் படத்தையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக. தமிழ் என்ற மொழியை வைத்து வந்ததுதான் அதிமுக 1973, திண்டுக்கல் கோவை தேர்தலில் அதிமுக வெற்றி. 3% சதவீதத்தில் வெற்றி இழந்தோம். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 3 சதவித வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தங்கக்கவசம் தொடர்பாதொடரப்பட்ட வழக்கில் தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் ஒப்படைக்க தீர்ப்பு வந்துள்ளது ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அதிக நம் பக்கம் உள்ளதால் அடுத்த முறை கண்டிப்பாக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தங்க கவசத்தை பெற்று வழங்குவார் தோல்வி நமக்குள்ள ஓபிஎஸ்க்கு தான்' ஒரு...
தமிழகம்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை. தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி.

தாம்பரம்- செங்கோட்டை இடையே திருவாரூர் காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் விட பொது மேலாளர் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை! கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவாரூர் காரைக்குடி பிரிவில் விரிவுபடுத்த என் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் செய்துள்ள இந்த பரிந்துரையை வரவேற்கிறேன்! அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்! கம்பன் விரைவு ரயில் திருவாரூருக்கும் காரைக்குடிக்கும் இடையே மீண்டும் இயக்க நான் ஆகஸ்ட் 31ஆம் தேதி தெற்கு ரயில்வேபொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன். மக்கள் கோரிக்கையை நான் அவருக்கு தெரிவித்தேன். பொது மேலாளர் செப்டம்பர் 26 தேதியிட்ட பதில் கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளார். அதில் தாம்பரத்துக்கும் செங்கோட்டைக்கு இடையே திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை ஒரு புதிய ரயிலை இயக்க கால அட்டவணை ரயில்வே...
தமிழகம்

உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேவர் தங்க கவசம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு – பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன்னிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களால் கடந்த 2014ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு தங்க கவசத்தை எடுத்துசெல்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்திவிழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை தொடங்கி வரும் 30-ந்தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தங்க கவசத்தை பெற உரிமம் கேட்டு ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை...
தமிழகம்

விருதுநகரில் வரும் 28ம் தேதி, விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 28ம் தேதி (வெள்ளி கிழமை) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 28ம் தேதி ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரிடையாக மனுக்கள் கொடுத்து தீர்வு காணலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செய்தியாளர் : வி காளமேகம்...
தமிழகம்

சாத்தூர் அருகே, மில் தொழிலாளி தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - தாயில்பட்டி அருகேயுள்ள மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி குருலட்சுமி (26). சதீஷ்குமார்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை விடுமுறையில், மடத்துப்பட்டிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர் உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகலறிந்த வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, சதீஷ்குமார் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம்...
தமிழகம்

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை புதிய வழிதடத்தில் செல்லும் விரைவு ரயிலுக்கு இராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை

தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் பல அறிவிக்கப்பட்டது. அதில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு இராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரயில் இன்று முதல் துவங்கப்பட்டது. செங்கோட்டையிலிருந்து வருகை தந்த சிறப்பு ரயிலுக்கு இராஜபாளையம் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில்வே பயனாளர்கள் சங்கம் சார்பில் சுகந்தம் ராமகிருஷ்ணன் தலைமையில் ரயில் இன்ஜினுக்கு வாழை மரக்கன்றுகள், மாலை அணிவித்து ரயில்வே டிரைவர் ராமர், துணை டிரைவர் அருள்ராஜ், கார்டு இளங்கோ ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே செங்கோட்டை மதுரை வரை சென்ற ரயிலில் ஒன்பது பெட்டியில் உள்ளது ஆனால் தற்போது செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்வதால் அதிக பயணிகள் பயன்படும் வகையிலும் பயணி வசதிக்காக 20 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது பயணிகளுடைய கோரிக்கையாக...
தமிழகம்

சுற்று சூழலை காக்க வலியுறுத்தி 2 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் – ரோட்டரி உறுப்பினர்கள் 4 பேர் மதுரை வருகை

சுற்றுசூழலைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோட்டரி குழு மதுரை வந்தது. ரோட்டரியின் ஏழாவது செயல்திட்ட பரிந்துரை, மக்கள் உட்பட அனைத்து உயிர்களும் வாழ, சுற்றுச் சூழலைப் பேணிக் காத்தல் மற்றும் நட்பு பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இந்த விழிப்புணர்வை தமிழ்நாடு முழுதும் சென்று பரப்பும் பணியை ரோட்டரி தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். ரோட்டரி பன்னாட்டு மாவட்டம் 3203ஐ சேர்ந்த திருப்பூர் ரோட்டரி சங்க உறுப்பினர் ரவீந்திரன், ஈரோடு உறுப்பினர் சிவபால், திண்டல் உறுப்பினர் பூமா மகேந்திரவர்மன், அவிநாசி கிழக்கு சங்க உறுப்பினர் விசித்திரா செந்தில்குமார் ஆகியோர் இப்பயணத்தை மேற்கொள்கின்றனர். 5 நாட்களில், 2 ஆயிரம் கி.மீ., தூரம் பயணிக்கும் இக்குழு, ரோட்டரி சங்கங்களுக்கு சுற்றுச்சூழல் செயல்திட்ட கையேட்டை கொடுத்து, சங்கக் கொடிகளையும் பரிமாறிக்கொள்ளும். திருப்பூரில் மாவட்ட ஆளுநர் இளம் குமரன் தொடங்கிய இக்குழு,...
1 463 464 465 466 467 556
Page 465 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!