தமிழகம்

தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறைவான இடங்கள் ஒதுக்கீடு: திமுக மீது காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு மிக குறைவான இடங்களை திமுக ஒதுக்கியுள்ளதால், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9-ம்தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய 9 கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளிடம் பேசி...
தமிழகம்

அரசு அதிரடி.. ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழக அரசில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் நிதித்துறைத் துணைச் செயலராக பிரதிக் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை இணைச் செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்புச் செயலராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்....
தமிழகம்

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்…! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் இன்று கூறப்படுகிறது....
தமிழகம்

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இரவு 3.30 மணி வரை அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகரில் 8.2 செ.மீ மழை பொழிந்துள்ளது. தரமணி - 7.5 செ.மீ, பெருங்குடி - 7.3 செ.மீ, அண்ணா நகர் - 7.3 செ.மீ, நந்தனத்தில் 6.6 செ.மீ மழை பெய்துள்ளது. மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், பெருங்குடி, நந்தனம், சென்ட்ரல், கிண்டியில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்பட தமிழகத்தின்...
தமிழகம்

அதிகபட்சமாக 3,203 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல்: மின் வாரியம் புதிய சாதனை

மின்வாரியம் இதுவரை இல்லாத அளவாக மிக அதிகபட்சமாக 3,203 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் கிடைத்து வருகிறது. அத்துடன், மத்திய அரசும் சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க மாநில அரசுகளை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால், பல நிறுவனங்கள் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றன. தற்போது, தமிழகத்தில் 4,200 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன. இதுதவிர, தனிநபர்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளிலும் சூரியத் தகடுகளை அமைத்து மின்னுற்பத்தி செய்கின்றனர். தனியார் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது. மழைக் காலங்களை தவிர்த்து,ஏனைய நாட்களில் நாள்தோறும்...
தமிழகம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்: உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கட்சி அலுவலகங்கள், வீடுகள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார பாதிப்பு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி அளவில் கட்சி அலுவலகங்கள்,...
தமிழகம்

22 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் வைரமுத்து நூல்!

கவியரசு வைரமுத்து எழுதிய நூலொன்று 22 மொழிகளில் மொழிபெயர்க்க வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கவியரசு வைரமுத்து எழுதிய நூல்களில் ஒன்று கள்ளிக்காட்டு இதிகாசம். இந்த நூல் தமிழில் எழுதப்பட்டது என்பதும் இந்த நூல் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூல் தற்போது 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு நூல் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கவியரசு வைரமுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் – தமிழக அரசு

தமிழகத்தில் அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களிலும் இன்று முதல் இலையில் உணவு பரிமாறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களில் இலையில் உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களில் உள்ள அன்னதானக் கூடங்களில் இன்று முதல் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்களுக்கு இலையில் உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை இலையிலும், கோயில்கள் மூடியிருக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொட்டலங்களில் கட்டியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று காலை மற்றும் மாலை நேரங்களில்...
தமிழகம்

மாணவர்களுடன் இனைந்து பசுமை விழிப்புணர்வில் ஈடுபட்ட “திருவொற்றியூர்” காவலர்கள்

சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான வெள்ளையன் செட்டியார் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று திருவொற்றியூர்...
1 461 462 463 464 465 498
Page 463 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!