தமிழகம்

தமிழகம்

அண்ணல் அம்பேத்கரின் வெண்கல சிலை வைக்க அனுமதி வேண்டி ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம் கிராமச் சாவடியில் ஏற்கனவே சேதமடைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையை பராமரித்து, வெண்கலச் சிலை வைக்க அனுமதி வேண்டி விசிக, கட்சியின் தேனி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிலை அமைப்புக் குழுத் தலைவர் திரு, சோ.சு.சுருளி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் அண்ணாத்துரை வரவேற்புரையாற்றினார். விசிக மாவட்ட பொருளாளர் பெர்க்மான்ஸ், மாவட்ட து, செயலாளா ஆரோக்கியசாமி, அப்பாவுபறையனார், மாவட்ட அமைப்பாளர் அந்தோணி, ஆலோசகர் ஜெயச்சந்திரன், ஆரோக்கியராஜ் ExMC ஆகியோர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விசிக.முதன்மைச் செயலாளர், ஏ.சி. பாவரசு அவர்களும், துணை பொதுச் செயலாளர் வெ. கனியமுதன் , தேனி பாராளுமன்ற தொகுதிச் செயலாளர் இரா.தமிழ்வாணன், தொழிலாளர் விடுதலை முன்னணி க.தமிழன் , தமிழ்புலிகள் கட்சியின் மாவட்டஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ஆதித்தமிழர் பேரவை அதியர்மணி எஸ்டிபிஐ கட்சி கலில் ரஹ்மான், தமு மு க.முபாரக்...
தமிழகம்

என் கிராமம், என் ஊரு, என் மக்கள் என தன்னார்வலராக குண்டும் குழியுமான சாலை சீரமைக்க, ஏழை, எளிய மக்களுக்கு தினமும் உணவளிக்கும் மதுரை வைக்கம் பெரியார்நகர் லூர்து மேரி,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சாமநத்தம் ஊராட்சி வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் லூர்து மேரி (வயது 62). இவரது கணவர் பெயர் செல்வம் .மற்றும் இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் மதுரை மாநகருக்கு மிக அருகே உள்ளது சாமநத்தம் ஊராட்சியில் பெரியார்நகர் பகுதி உள்ளது. அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதியான பெரியார் நகருக்கு குண்டும் குழியுமான சாலை, சாக்கடை என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த லூர்து மேரி என்பவர் தனது சொந்த செலவில் கட்டிட இடிபாடுகளை விலைக்கு வாங்கி குண்டும் குழியுமான சாலையில் கொட்டி பள்ளங்களை தனி ஒருவராக சீரமைக்கிறார். மேலும் கொரோனா களத்தில் இருந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வரும் லூர்து மேரி தினமும் 20 பேர் முதல் 50 பேர் வரை...
தமிழகம்

மதுரை அப்போலோ மருத்துவமனையில் 51வயது நபருக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது

மூளைச்சாவு ஏற்பட்டவரின் கல்லீரலை பொருத்தி மதுரை அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்ததுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ குழுவினர்கள் கூறியதாவது, கடந்த நவ.16 அன்று தமிழ்நாடு உறுப்பு மாற்று வலையமைப்பு மூலம் மூளைச்சாவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நபரிடமிருந்து கல்லீரல் பெறுவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கிடைத்தது. தகவல் கிடைத்த உடனேயே அறுவை சிகிச்சை குழுவானது இரண்டு அணிகளாகப் பிரிந்து வேகமாக செயலாற்றத் தொடங்கியது. ஒரு குழு அரசு மருத்துவமனையிலிருந்து கல்லீரலைப் பெற்று வருவதற்காக நவ.17ம் தேதி காலை 5 மணிக்கு அனுப்பப்பட்டது. அதேவேளையில் மற்றொரு குழுவினர் கல்லீரல் பொருத்த வேண்டியவருக்கான அறுவை சிகிச்சைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர். மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஏற்புத் தன்மை மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்டு சரியாக 10 மணிக்கு...
தமிழகம்

தொடர் முழக்க போராட்டம்

இன்று (25 - 11 - 2022 ) காலை - 11 மணிக்கு மூன்றாம் நாளாக நீதி கேட்டு தொடர் முழக்க போர்ட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் 4 வது வார்டு செயலாளர் இளையராஜா அவர்களின் வசித்து வந்த வீட்டை பெரியகுளம் வருவாய் துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேர்ந்து சுமார் 60 ஆண்டுகாலமாக வசித்து வந்த வீட்டை இடித்ததை கண்டித்து நீதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் மீது வண்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இளையராஜா குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க கோரியும் இடித்த வீட்டை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தமிழ்...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் தாட்கோ மூலம் மலைவாழ் பெண்களுக்கு கடனுதவி வழங்கினார்.

வேலூர் ஆட்சியர் கூட்டரங்கில் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை மலை பகுதியில் தையல் பயிற்சி முடித்த 23மலைவாழ் பெண்களுக்கு தொழில்முனைவோர் திட்டத்தில் தையல் இயந்திரம் மற்றும் ஆடை தயாரிக்க 50 சதவீத மானியத்துடன் ரூ1 லட்சம் கடன் உதவியை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார். அருகில் அணைக்கட்டு எம் எல் ஏ நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, தாட்கோ மேலாளர் பிரேமா ஆகியோர் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள், மர்ம நோயால் அழியும் நிலை – கத்தரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் பாதிப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கத்தரி , வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் ,  கடந்த சில மாதங்களாக மிளகாய் செடியில் மர்ம நோய் தாக்கி செடி நாளடைவில் கருகி , அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தென்பழஞ்சி மாவிலிப்பட்டி , கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200 ஏக்கர் பரப்பளவில் பயரிடப்பட்ட மிளகாய்ச் செடிகளுக்கு மர்ம நோய் தாக்கி வருவதால் , தாங்கள் முதலீடு செய்து விவசாயம் செய்த மிளகாய் செடிகள் வீணாகி கருகி வருவதை எண்ணி, மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள், எதற்காக இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது ? அழிவுக்கு காரணம்...
தமிழகம்

திருமங்கலத்தில் திமுக சார்பில் வருகிற சனி, ஞாயிறு இரு தினங்களில், புதிய வாக்காளர் சேர்த்தல் குறித்து திமுக நிர்வாகிகளிடையே கலந்தாய்வுக் கூட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில், மாவட்டச் செயலாளர். மணிமாறன் தலைமையில், வருகிற சனி, ஞாயிறு (26.11.22 & 27.11.22) ஆகிய இரு தினங்களில் , தேர்தல் ஆணைய உத்தரவுபடி, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு குறித்தும், வாக்காளர்களின் வாக்குரிமை குறித்தும் பொதுமக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும் எனப்பேசப்பட்டது. இதில் திருமங்கலம் நகரம் , ஒன்றியம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியிலிருந்து ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கு பெற்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலத்தில் உள்ளபாமக நகரச் செயலாளராக பணியாற்றிய கண்ணையா, தற்போது மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பதவியேற்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கண்ணையா (65)என்பவர் கடந்த 15 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது . இவர் கடந்த முறை திருமங்கலம் பா.ம.க நகரச் செயலாளராக பணியாற்றினார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தைலாபுரத்தில் அக்கட்சியின்செயற்குழு கூட்டம், கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தின் போது திருமங்கலம் கண்ணையா (65)மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பதவி அளித்து அவருக்கு கட்சியின் சார்பில் சான்றிதழும் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற கண்ணையாவிற்கு, திருமங்கலத்தில் அக்கட்சியின் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் ,மாலைகள்...
தமிழகம்

தேனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

தேனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, ஏ.எச்.எம். டிரஸ்ட் நிர்வாகி இப்ராகீம்.மஞ்சு.உள்பட பலர் உடன் இருந்தனர். இந்த பேரணி தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கி தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்.

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 48ஆனையாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.   இதில் 8 இடங்கள்காலியாக உள்ளது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் சங்கம் சார்பில்...
1 415 416 417 418 419 545
Page 417 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!