தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பது தொடர்பாக, கோட்டாட்சியரிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வி – உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் , வருகிற டிசம்பர் 8ஆம் தேதி சுங்கச் சாவடி -யை முற்றுகையிட போவதாக முடிவு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி , கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னதாக , இச்சுங்கச்சாவடி விதிமுறையை மீறி இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கான உரிய இடமான ராயபாளையம் என்ற இடத்தில் அமைக்கப்படாமல் , கப்பலூரில் அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ,  திருமங்கலம் நகர்வாசிகள் மற்றும் பொதுமக்கள், தொழிலதிபர்கள், வேன், டாக்ஸி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் பலமுறை பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டண விலக்கு அளித்தது . இதனை தொடர்ந்து அவ்வப்போது உள்ளூர் வாகனங்களுக்கும் , கட்டண விலக்கு செலுத்த கூறி சுங்கச்சாவடி நிர்வாகத்தினர், பலமுறை நிர்பந்தப்படுத்தியதால் , சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கும், திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெறுவது தொடர்...
தமிழகம்

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் கவேஅ. மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தின் மூலமாக கலைத்திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றது.

எரச சக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி கலை நிர்வாக குழு உறுப்பினர்கள்,அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார வள மேற்பார்வையாளர், வட்டார வள மைய கல்வி அலுவலர்கள், அய்யம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் நகராட்சி மெயின் ரோடு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரால் கலைத்திருவிழா நிகழ்வானது துவக்கி வைக்கப்பட்டது. நடைபெற்ற கலை திருவிழாவில் கலை நிகழ்வுகளாக அரசு பள்ளி மாணவ மாணவிகள் பல விதமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பித்தனர். நவ.30 அன்று,  போட்டியின் முதல் நாள் நிகழ்ச்சியாக அனைத்து அரசு நடு,உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் 6 முதல் 8 வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு சின்னமனூர் கவேஅ. மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. கலைத்திருவிழா போட்டிகளின் நடுவர்களாக பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செயல்பட்டனர். இப்போட்டிக்கான...
தமிழகம்

பொது மக்கள் எதிர்ப்பை தாண்டி பெரியகுளத்தில் மதுபான கடை திறப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, மஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு இடையூறாக மது பான கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றது, கடையை திறக்க அனுமதி கொடுக்க கூடாது என இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கடந்த 22 ம்தேதி காவல்துறை DSP அவர்கள் இடத்தில் மனு அளித்தார்கள். கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளிக்க பட்ட நிலையில் இன்று மதுபான கடை திடிரென திறக்க பட்டது இதனால் அந்த பகுதியில் பொது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தார்கள். உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அஜ்மீர் காஜா, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஜாவித் மற்றும் நிர்வாகிகள் மஜக நிர்வாகிகள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள்...
தமிழகம்

உசிலம்பட்டி 58 கிராம இளைஞர் சங்கத்தினர் கோரிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாய குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட செளந்திரபாண்டியன் தலைமையிலான 58 கிராம இளைஞர் சங்கத்தினர் பேசியதாவது,58 கிராம கால்வாய் திட்டத்தில் குளறுபடி நீக்கி முறையாக கடைமடை கண்மாய் வரை தண்ணீர் நிரப்பி தர வேண்டும்.2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 7 வது முறையாக சோதனை ஓட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வில்லை. 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழ் அனைத்து கண்மாய்களையும் 35 நிரப்பி தர வேண்டும் என்றும்,  உசிலம்பட்டி கண்மாய் சுற்றிலும் 2 கிமீ சுற்றளவில் நடைபாதை அமைத்து நடுவே தீவுகள் போன்று உருவாக்கி மாடர்ன் கண்மாயாக மாற்றி தரவேண்டும் என வலியுறுத்தி பேசினர். செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

இராஜபாளையத்தில் பள்ளிக்கல்வி துறைசார்பாக கலைத்திருவிழா என்ற தலைப்பில் நடைபெற்ற 200 க்கும் மேற்பட்ட போட்டிகள்

இராஜபாளையத்தில் பள்ளிக்கல்வி துறைசார்பாக இராஜபாளையம் வட்டாரப்பகுதி அரசு பள்ளிகளிலுள்ள மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் கலைத்திருவிழா  என்ற தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட போட்டிகள் சேத்தூர் சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளின் தொடக்கவிழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தலைமையில் தனுஷ் M.குமார். MP மற்றும் தங்கப்பாண்டியன் சட்டமன்ற உருப்பினர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்னர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்வழங்கினர். இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உருப்பினர் வட்டார அளவிலுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று பின் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் வெற்றி பெறும் 200 மாணவ மாணவியர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல தமிழக முதல்வர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.  மேலும் இந்தியாவிலே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவரும் முதல்வர் நமது தமிழக முதல்வர் தான்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து..துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு, சுற்றுலா பேருந்து ஒன்று 50 பயணிகளுடன், இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. நத்தம்பட்டி அருகே சுற்றுலா பேருந்து சென்றபோது, சீர்காழி பகுதியில் இருந்து ராஜபாளையத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற கார் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்த, சீர்காழியைச் சேர்ந்த விஜயலட்சுமி, மாலதி, சுப்புலட்சுமி, மகேந்திரன், தங்கமுடி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து தகவலறிந்த நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..எந்த அதிகாரியிடம், லஞ்சப் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்ட தி.மு.க. பெண் கவுன்சிலர்

வீட்டுத் தீர்வை பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சப் பணத்தை எந்த அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு பணத்துடன் வந்த தி.மு.க. பெண் கவுன்சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விவதாங்கள் நடத்தப்பட்டு, 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருத்தங்கல் பகுதியில் உள்ள 5வது வார்டு தி.மு.க. கட்சியின் பெண் கவுன்சிலர் இந்திராதேவி பேசும்போது, தனது வார்டு பகுதியில் வீட்டுத் தீர்வைக்கு பெயர் மாற்றம் செய்வதற்காகவும், குடிநீர் இணைப்பிற்கு பெயர் மாற்றம் செய்வதற்காகவும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, 11 பேர் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். முறைப்படி மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத...
தமிழகம்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ, கமிஷ்னர், மேயர் ஆய்வு – ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் வரும்?

வேலூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை உள்ளே வாடகை கடைகள் திறக்கப்படவில்லை.  நடைமேடை முழுவதும் சிறிய, சிறிய கடைகள் வர ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக நடைமேடை உள்ளே, வெளியே நிறைய கடை வந்து குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆளும்கட்சியினரும், மாநகராட்சி 4-வது மண்டல ஊழியர்களும், செக்யூரிட்டிகளும் மாமூல் வாங்குவதால் அந்த நடைமேடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவதில்லை. இதுகுறித்து மாநகராட்சிக்கு பல புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.  உடன் மாநகராட்சி கமிஷ்னர் அசோக் குமார், மேயர் சுஜாதா உள்ளிட்ட 4-வது மண்டல அதிகாரிகள் இருந்தனர்.  ஆய்வுக்கு வந்த சென்ற சில மணி நேரத்தில் மீண்டும் பிளாட்பார கடை விற்பனை சூடுபிடிக்க துவங்கின. செய்தியாளர்...
தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டார். நவம்பர் 30 -ம் தேதி அண்ணா அறிவாலையத்தில் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சால்வை அணிவித்துவாழ்த்து பெற்றார் கதிர் ஆனந்த். அதேப்போல் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அருகில் ஓட்டுநர் அணிசெயலாளர் செங்குட்டுவன், துணை செயலாளர்கள், டாக்டர் முத்துராஜா, தினகரன், சிவராஜ், உதயசூரியன், விஷ்ணுபிரபு ஆகியோர் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

விருதுநகர் அருகே, விபத்து வழக்கில் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

விருதுநகர் அருகேயுள்ள ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் உஸ்மான்அலி. கடந்த 2010ம் ஆண்டு இவர் பணியில் இருந்த போது, ஆமத்தூரில் நடந்த சாலை விபத்தில் சிக்கிய லாரியை ஆய்வு செய்வதற்காக, லாரி உரிமையாளர் சுபாஷ் என்பவரிடம் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர். வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் பணி ஓய்வுக்கு முன்பாக உஸ்மான்அலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். லஞ்ச வாங்கிய வழக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹாஜிரா ஆர் ஜிஜி, லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் உஸ்மான்அலிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 411 412 413 414 415 557
Page 413 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!