கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவில் விளக்குகள் பழுதாகி எரியாததால் விபத்தில் அடிபட்டு வந்தவருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் நேற்று மாலை 7மணியளவில் பள்ளக்காடு சாலையில் கெங்கவல்லி பகுதி சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கவேல் (70) அவரது நண்பர் இளங்கோ(55) ஆகிய இருவரும் டூவீலரில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து படு காயமடைந்தனர்.
உறவினர்கள் இருவரையும் மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர் அப்போது அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை அளிக்கப்படும் அறையில் விளக்குகள் எரியவில்லை இதையடுத்து உறவினர்கள் செல்போன் டார்ச் லைட் அடித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கேட்டு உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மின் விளக்குகளை பழுது நீக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்: ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு...
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.