தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள்; விசிக தென்காசி நாடாளுமன்ற செயலாளர் வர்க்கீஸ் வாழ்த்து
தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள் புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS ஆகியோருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி நாடாளுமன்ற செயலாளர் மை.வர்க்கீஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுகத்தினர் குடியிருப்பில், கடந்த ஒரு வாரம் முழுவதும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகளால் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக குழந்தைகள் அதே ஊரில் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அந்த ஊரில் உள்ள குடிநீரில் பிரச்சினை இருப்பதாக கூறியிருக்கிறார்கள், அதனை தொடர்ந்து அங்குள்ள இளைஞர்கள் குடிநீர் தொட்டியில் ஏறி பார்க்கும் போது, அந்த குடிநீரில் மனித மலம் கலந்திருப்பதை,...
