தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் போடி அணி வெற்றி.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவேங்கடம் நினைவு கூடைப்பந்து குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவில் ஆண்களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு திடலில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 14 அணிகள் பங்கேற்றது. போட்டிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதலில் நாக்கவுட் முறையிலும், நான் அவுட் முறையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு லீக் சுற்றும் முறையிலும் போட்டிகள் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் போடி கூடை பந்தாட்ட கழகமும், பெரியகுளம் திருவேங்கடம் குடைப்பந்தாட்ட கழகமும் போட்டியிட்டதில் போடி கூடை பந்து கழகம் 84க்கு 77 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று போடி கூடை பந்தாட்ட கழக அணி கோப்பையை வென்றது. முன்னதாக...
