தமிழகம்

தமிழகம்

சிவகாசியில் பணியிலிருந்த பெண் காவலரை தாக்கிய, வழக்கறிஞர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜம்மாள். இவர் நேற்று இரவு சிவகாசி முருகன் கோவில் பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவகாசி - திருத்தங்கல் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் தகராறு செய்து கொண்டிருப்பதாக காவலர் ராஜம்மாளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்திற்கு ராஜம்மாள் விரைந்து சென்றார். அங்கு சாலையில் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விலக்க முயன்றார். அப்போது தகராறில் ஈடுபட்டிருந்த வாலிபர் ஒருவர், பெண் காவலர் ராஜம்மாளை பலமாக தாக்கினார். இது குறித்து தகவலறிந்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவலர் ராஜம்மாளை தாக்கிய வாலிபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில், பெண் காவலரை தாக்கிய வாலிபர் பெயர் முத்துமணிகண்டன் என்றும், அவர் வழக்கறிஞர்...
தமிழகம்

மதுரையில் தேமுதிக மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி பா. மணிகண்டன் தலைமையில் ஈரோடு மாவட்டம் இடைத்தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைப்படி மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக முத்துப்பட்டி பா.மணிகண்டன் தலைமையில் ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாநகர் தேமுதிக தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஏரளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன் ஆலோசனை கூறியதாவது ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பாக ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் ரமேஷ் வேட்பாளராக கேப்டன் அவர்கள் அறிவித்திருக்கிறார் அவரை வெற்றி பெற செய்வதற்கு தலைமைக் கழகம் நம்முடைய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளில் தீவிரமாக கட்சிப் பணியாற்ற வேண்டும் தேர்தல் முடியும் வரை ஈரோடு மாவட்டத்தில் மதுரை மாநகர்...
தமிழகம்

மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள்

நாடு முழுவதிலும் மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் முழு திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காந்தி நினைவு நிதியின் கீழ் இயங்குகின்ற காந்திய சிந்தனை கல்லூரி முதல்வர் முத்துலட்சுமி, அருங்காட்சியக செயலாளர் நந்தா ராவ், பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து வந்த மாசிலோனா குடும்பத்தினர் மற்றும் லோரா உள்ளிட்ட சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல, ஜப்பான் நாட்டு புத்த பிட்சு மஸ்தாவோ இஸ்தானி காந்தி சிலையின் காலில் விழுந்து கும்பிட்டு மரியாதை செய்தார். தொடர்ந்து ஜப்பான் மொழியில் காந்தியை போற்றும் விதமாக இசைக்கருவி இசைத்தவாறு பாடல் பாடினார். தொடர்ந்து காந்தியின் நினைவு...
தமிழகம்

மதுரை புறநகர் பகுதிகளில் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருடன் இனைத்து.முக அழகிரி பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு. கலக்கத்தில். திமுக நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் மீண்டும் அழகிரியின் பிறந்தநாள் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் திமுக நிர்வாகிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்த நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி விக்கிரமங்கலம் பகுதிகளில் அவரின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் சமீப காலமாக முக அழகிரி பிறந்த நாளை கொண்டாடுவதில் அவரது ஆதரவாளர்கள் இடையே சுணக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகனான உதயநிதி மதுரை வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான முக அழகிரியை அவரதுஇல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அப்போது தனது தம்பி மகன்...
தமிழகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க திரண்ட கிராம மக்கள்

மதுரை அருகே மினரல் வாட்டர் நிறுவனத்தை கட்டுப்படுத்த கோரி கிராம மக்கள் மனு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  மதுரை அருகே பனையூர் கிராமத்தில், கன்மாய் அருகே தனியாருக்கு சொந்தமான மினரல் வாட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால், இப்பொழுது அதில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் ,  மேலும் ,சுத்திகரிப்பு தண்ணீரை அருகில் உள்ள பொதுப்பணித்துறை கால்வாயில் கலக்க விடுவதால், விவசாயங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக இப்பதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இது தொடர்பாக, மதுரை சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும், மினரல் வாட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சிய அலுவலகத்திற்கு வந்து தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தை கட்டுப்படுத்த கோரியும் ஆலையை அதிகாரி பார்வையிட்டு உரிய...
தமிழகம்

திருவில்லிபுத்தூரில், அடிப்படை வசதிகளை செய்து தராத, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகர்மன்ற தலைவராக திமுக கட்சியைச் சேர்ந்த ரவிக்கண்ணன் உள்ளார். 33வது வார்டு கவுன்சிலராக, திமுக நகர செயலாளர் அய்யாவுபாண்டியன் இருந்து வருகிறார்.  இந்த நிலையில் 33வது வார்டு பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் மற்றும் கோவிந்தன் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்த பகுதியில் குடிநீர் வசதி, கழிவு நீர் வாறுகால் வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாததால், இந்தப் பகுதியின் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்று நோய்களை பரப்பும் கூடாரமாக உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை...
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் நடந்த குற்ற சம்பவங்கள்

அவனியாபுரத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை  அவனியாபுரம் எம் .எம். சி காலனி ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான் மகள் மீனாட்சி...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் தை வைரத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு – குன்றத்து முருகனுக்கு நாளை தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகை முன்னிட்டு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் தெப்ப திருவிழாவும் ஒன்று. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் சேஷ வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகை முன்னிட்டு தெப்ப முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு...
தமிழகம்

திருமங்கலம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் நடைபெறும் கட்டுமான பணிகளை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, கடந்த பல வருடங்களாக திறந்த வெளியில் செயல்பட்டு வந்ததால், மழைக்காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகமெங்கும் உள்ள நெல் மூடைகள் சேமிப்பு கிடங்குகளை பாதுகாப்பதற்காக , இரும்பினால் ஆன கூடாரங்கள் அமைத்து நெல் மூடைகளை பாதுகாக்க உத்தரவிட்டதையடுத்து, தோப்பூரில் அமைந்துள்ள கிட்டங்கியில் 18000 டன் மெட்ரிக் கொள்ளளவு கொண்ட நெல் மூடைகளை சேமிக்கும் அளவிற்கு, கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருவதை , தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறும் போது , தமிழ்நாடு முழுவதும் 213 கிட்டங்கியில் ரூபாய் 138 கோடியில் 2.86...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கொடிக்குளம் கிராமம். இக்கிராமத்தில் சின்னக்கண்மாய் பெரியகண்மாய் என இரு கண்மாய்கள் உள்ளன.இக்கண்மாய்களை ஏலம் விட இக்கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கண்மாய் ஏலம் விடுவது பலமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சின்னக்கண்மாய் ஏலம் விடப்பட்டதாகவும் பெரியகண்மாய்க்கு இன்று ஏலம் விட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு ஆத்திரமடைந்த கிராமமக்கள் கண்மாய் ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கொடிக்குளம் உள்பட 5 கிராம மக்கள் ஏலம் நடைபெற இருக்கும் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் உள்ள நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது..சம்பவமறிந்த அதிகாரிகள் கிராமமக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்றைய ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
1 304 305 306 307 308 557
Page 306 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!